கட்டுரைகள்

மார்க்கம் போதிப்பவர்களின் சறுக்கல்

மார்க்கத்தைச் சொல்லக்கூடியவர்கள், அறபோதகர்கள் பொய்யர்களாக, நேர்மையற்றவர்களாக இருந்தால் என்ன? அவர்கள் இந்தத் துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக, சிறந்தவர்களாக இருக்கிறார்கள். ஆகவே அவர்களின் அறிவுரைகளை நாங்கள் செவிமடுக்கிறோம். அவர்களின் தனிப்பட்ட வாழ்வைக் குறித்து எங்களுக்குக் கவலையில்லை. இப்படி ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்தக் கருத்து மற்ற துறைகளுக்குப் பொருந்தும். துறைசார்ந்த

செயல்படுங்கள்

“செயல்படுங்கள், ஒவ்வொருவரும் தாம் எதற்காக படைக்கப்பட்டார்களோ அதை நோக்கி இலகுபடுத்தப்படுவார்கள்” (நபிமொழி) ஒவ்வொரு முறையும் இந்த நபிமொழி வாசகத்தை படிக்கும் போதெல்லாம் எனக்கு ஆச்சரியமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. விதியை அற்புதமான முறையில் முன்வைக்கும் வாசகம் இது. விதியின் மீதான உங்களின் நம்பிக்கை உங்களை செயலின்மையின் பக்கம் இட்டுச் சென்று

செயல்படுதல்

சில நாட்களாக எதுவும் எழுதவில்லை, வாசிக்கவும் இல்லை. எழுத வேண்டும் என்று தோன்றவில்லை என்பதால் எதையும் எழுதாமல் முற்றிலுமாக விலகியிருந்தேன். என்னுடைய சூழலும் அதற்கான காரணங்களில் ஒன்று. கொஞ்ச நாட்கள் அப்படி இருக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனாலும் எதையோ இழந்ததுபோன்று உணர்வு. சில சமயங்களில் குழப்பமான நிலையும்

தன்னிகரற்ற வேதம்

இஸ்லாம் இறைவன் அருளிய மார்க்கம் என்று எப்படி கூறுவீர்கள்? நபியவர்கள் அவனிடமிருந்து வந்த உண்மையான தூதர் என்பதற்கான ஆதாரம் என்ன? இஸ்லாம் இறைவன் அருளிய இறுதி மார்க்கம் என்பதற்கும் நபியவர்கள் அவனிடமிருந்து வந்த இறுதியான தூதர் என்பதற்குமான ஆதாரம் திருக்குர்ஆன்தான். திருக்குர்ஆனைக் கொண்டே இஸ்லாம் அல்லாஹ்வின் மார்க்கம் என்பது

பொறாமை

பொறாமை யார் மீதெல்லாம் ஏற்படுகிறது, ஏன் ஏற்படுகிறது என்ற கேள்விகள் கொஞ்சம் சிக்கலானவை. அதற்குச் சில காரணங்களை நம்மால் வரையறுக்க முடியும். ஆனால் ஒட்டுமொத்தமாக அது இப்படித்தான் என்று நம்மால் உறுதியாக வரையறுத்துவிட முடியாது. நெருக்கம் பொறாமையை ஏற்படுத்தலாம். உங்கள் உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் உங்கள் மீது அதிகம்

குடும்பம், பொறுப்புகள்

சுமூகமான குடும்ப வாழ்வு குடும்ப வாழ்வு சுமூகமாகச் செல்வதற்குப் பின்னால் நேரடியான அல்லது மறைமுகமான சர்வாதிகாரமும் நிர்ப்பந்தமும் இருக்கின்றன. இரு சமமான மனிதர்கள் நீண்ட நாட்கள் ஒன்றுசேர்ந்து இருக்க முடியாது. இருவரிடமும் காணப்படும் கூர்மையான ஈகோ அவர்களைப் பிரித்து விடும். ஆனாலும் அவர்கள் ஓர் இடைவெளியோடு சேர்ந்திருக்க முடியும்.