உங்கள் உள்ளங்களிலுள்ள அழுக்குகளை நீங்கள் நீக்கிவிட்டால் யாரும் போதிக்காமலேயே அவற்றில் இறைத்தூதர்களின் போதனைகளை நீங்கள் காண்பீர்கள் என்கிறார் ஜலாலுத்தீன் ரூமி. யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே சரி எது, தவறு எது என்று பிரித்து அறியும் பக்குவம் மனித உள்ளத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இஸ்லாம் என்பது இறைவன் மனிதனுக்கு வழங்கிய வழிகாட்டல்.
செய்யத் குதுப் திருக்குர்ஆனின் நிழலில் வாழ்வது அருட்கொடையாகும். அனுபவித்தவரே அதனை அறிந்துகொள்வார். அது வாழ்நாளை அதிகரிக்கச் செய்கின்ற, தூய்மைப்படுத்துகின்ற அருட்கொடை. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. குறிப்பிட்ட காலம்வரை திருக்குர்ஆனின் நிழலில் வாழும் பெரும் பாக்கியத்தை அவன் எனக்கு அருளினான். என் வாழ்வில் அனுபவிக்காத அருட்கொடைகளையெல்லாம் அந்தக் காலகட்டத்தில்தான் அனுபவித்தேன்.