மார்க்கம் என்பது ஒரு வழிமுறை. அது எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வழிகாட்டுகிறது. இங்கு பல வகையான மார்க்கங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் இயல்புக்கு உகந்த, தாங்கள் சரியெனக் கருதும் ஒரு மார்க்கத்தைப் பின்பற்றுகிறார்கள். சிலர் எந்த மார்க்கத்தையும் பின்பற்றாமல் கட்டுப்பாடுகள் அற்ற ஒரு வாழ்க்கையை வாழ்கிறார்கள். முஸ்லிம்களாகிய
மனதில் பயம் தொற்றிக் கொண்டால் வாழ்க்கை நரகமாகி விடும். உறுதியான நம்பிக்கையைக் கொண்டே அந்த பயத்தை நீக்க முடியும். அது நம்மைப் படைத்துப் பராமரிக்கும் பேரிறைவனின் மீதான உறுதியான நம்பிக்கை. அவன் நம்மைக் கைவிட மாட்டான் என்னும் வலுவான நம்பிக்கை. அந்தப் பேரிறைவனை விட்டுவிட்டு நீங்கள் எதைப்
அந்த இடம் எனக்கு சொர்க்கமாகத் தெரிந்தது. அந்த இடத்தை சொர்க்கம் என்றுதான் நினைத்தேன். அந்த இடத்தின் அமைதி மனதில் அபூர்வமான உணர்வையும் அமைதியையும் ஏற்படுத்தியது. எனக்காகவே அந்த இடம் உருவாக்கப்பட்டிருப்பதாக நினைத்தேன். வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாத அற்புதமான அனுபவம் அது. அந்த அனுபவம் குறுகிய காலம் அல்ல, நீண்ட
இந்தக் காலகட்டத்தின் மிகப் பெரிய சவால் என்ன தெரியுமா? நாம் இயல்பு நிலையில் நீடிப்பதுதான். எந்த இயல்பில் நாம் படைக்கப்பட்டோமோ அந்த நிலையில் நாம் நீடிப்பது. பிறழ்வு நிலை இயல்பு நிலையாக சித்தரிக்கப்படும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வீடியோக்கள், சினிமாக்கள், பிறழ்வு எழுத்துக்கள் வழியாக நம்
தேவையில்லாத, முக்கியத்துவம் அற்ற செயல்பாடுகளில் உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொண்டால் தேவையான, முக்கியத்துவம் வாய்ந்த செயல்பாடுகளை செய்ய முடியாதவர்களாகி விடுவீர்கள் அல்லது அவற்றை சரியான முறையில் நிறைவேற்றாதவர்களாகி விடுவீர்கள். கவனச் சிறதல்கள் மிகுந்த இந்தக் காலகட்டத்தில் மிக அவசியமாக செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன என்பதை முடிவு செய்த
அகீதா என்றால் கொள்கைசார்ந்த, நம்பிக்கைசார்ந்த விசயங்கள் தொடர்பாக சொல்லப்படும் ஒரு வார்த்தை. இந்த வார்த்தை நபியவர்களின் காலகட்டத்திலோ அவர்களுடைய தோழர்களின் காலகட்டத்திலோ உருவாகி இருக்கவில்லை. இந்த வார்த்தையே பிற்காலத்தில் உருவாகி வந்த அந்நியமான ஒன்றுதான். சரி, இந்த வார்த்தையை நாம் ஏற்றுக்கொள்வோம். முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய