கட்டுரைகள்

வாழ்வென்பது யாதெனில்…

காலத்தைக் காட்டிலும் சிறந்த ஆசான் யாருமில்லை. காலம் நாம் எதிர்பார்க்காத, அறியாத பல விஷயங்களை நம் முன்னால் கொண்டு வருகிறது. நம் நிலைப்பாடுகளைத் தலைகீழாக மாற்றுகிறது. நாம் சரியெனக் கண்டதைத் தவறெனக் காட்டுகிறது. நாம் தவறெனக் கண்டதை சரியெனக் காட்டுகிறது. நாம் விரும்பியதை வெறுக்கவும் வெறுத்ததை விரும்பவும் வைக்கிறது.

உலக வாழ்வின் செல்வங்களை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

மனிதனுக்கு வழங்கப்படும் செல்வம், அறிவு, அதிகாரம் மற்றும் இன்னபிற அருட்கொடைகள் யாவும் சோதனையே என்று இஸ்லாம் கூறுகிறது. அவற்றின்மூலம் மனிதன் சோதிக்கப்படுகிறான். அவற்றைக் கொண்டு அவன் கர்வம்கொள்கிறானா? வரம்பு மீறுகிறானா? அல்லது அவற்றின் மூலம் அவன் இறைவனுக்கு நன்றியுள்ள அடியானாக நடந்துகொள்கிறானா? மறுமையின் நிலையான வீட்டைத் தேடுகிறானா? என்று

நாத்திகம் – ஒரு குறுக்கு விசாரணை

நாத்திகம் என்பது ஒரு மனநிலை. அது எதையும் எதிர்க்கத் துணிந்த கர்வமும் பிடிவாதமும் கொண்ட ஒரு மனநிலை. மற்றபடி ஒவ்வொருவரும் தம்மை இயக்கும் சக்தியை, தம் மீது ஆதிக்கம் செலுத்தும் இறைவனை உணரத்தான் செய்கிறார்கள். இதில் விதிவிலக்கானவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. மனிதன் யாரை ஏமாற்றினாலும் அவனால்

நாத்திகம் என்னும் சீர்குலைவு

நாத்திகர்கள் மனிதம் பேசினாலும் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள் என்று நாம் கூறுவதற்குக் காரணம், எல்லாவித அறவிழுமியங்களையும் தகர்க்கும் அவர்களின் நாத்திக வாதம்தான். ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு ஏன் நன்றியுடன் நடந்துகொள்ள வேண்டும்? ஏன் அநீதி இழைக்காமல் இருக்க வேண்டும்? கணவன் தன் மனைவிக்கோ மனைவி தன் கணவனுக்கோ

பாவங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் – 2

நாம் செய்யக்கூடிய பாவங்களுக்கும் நமக்கு வரக்கூடிய துன்பங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று இஸ்லாம் கூறுகிறது. நம்முடைய பாவங்கள் நம் ஆரோக்கியத்தில் வாழ்வாதாரத்தில் குடும்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இது ஒரு மனிதன் மற்றொருவனைப் பார்த்து “உன் பாவத்தினால்தான் உனக்கு இப்படியெல்லாம் துன்பங்கள் வருகின்றன” என்று சொல்ல வேண்டிய விசயம்

பாவங்கள் ஏற்படுத்தும் விளைவுகள்-1

ஒரு மனிதன் பாவங்களில் மூழ்கிவிட்டால் அவன் இறைவனைவிட்டும் அவனை நினைவுகூருவதைவிட்டும் தூரமாகிவிடுகிறான். பாவத்தில் மூழ்கியவாறே அவனால் இறைவணக்கத்தில் ஆர்வத்துடன் ஈடுபட முடியாது. பாவத்தில் இன்பம் காண்பவரால் இறைவணக்கத்தில் இன்பம் காண முடியாது. ஒரு கட்டத்தில் இறைவணக்கம் அவனுக்கு கடினமான ஒன்றாகிவிடும். அதுவரை கட்டாயத்தின் அடிப்படையில் செய்து கொண்டிருந்தவன் கொஞ்சம்