தேவையும் சார்பு வாழ்க்கையும்

“ஒரு மனிதன் எந்த அளவு மக்களிடம் தேவையற்றிருப்பானோ அந்த அளவு அவன் அவர்களிடம் கண்ணியம் வாய்ந்தவனாக இருப்பான்” என்ற நபிமொழியை நண்பர் ஒருவரிடம் கூறினேன். ஆனால் இந்த விசயத்தில் கூடுதலாக புரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு அம்சமும் இருக்கிறது. முடிந்த மட்டும் பிறரிடம்…

ஸலஃபி தஃவா – 1

ஒரு தவ்ஹீத் அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருக்கின்ற ஒருவரிடம் கேட்டேன், “நீங்கள் ஏன் முன்னர் கூறியதுபோன்று குர்ஆன், சுன்னாவே போதும் என்ற வாதத்தை முன்வைப்பதில்லை? ஏன் இப்போது ஸலஃபி வாதத்தை முன்வைக்கிறீர்கள்?” அவர் கூறினார்: அந்த வாதம் மக்களை வெகுதூரம் அழைத்துச்…

இக்கிகய்

நாம் நோக்கத்தை உருவாக்க வேண்டியதில்லை. நம்முடைய நோக்கம் என்னவென்று கண்டடைய வேண்டியதிருக்கிறது. இக்கிகய் என்ற புத்தகத்தில் இடம்பெறும் வாசகம்தான் இது. மிகச் சரியான கருத்து இது. இதைத்தான் இஸ்லாமும் கூறுகிறது. ஒரு மனிதன் தன் நோக்கம் என்னவென்று கண்டடைந்து அதில் தன்னை…

நிச்சயமின்மை

நிச்சயமின்மை உங்களைச் சூழ்ந்திருக்கிறது. எப்படி உங்களால் நிம்மதியாக இருக்க முடிகிறது? நிச்சயமின்மை இந்த உலகின் இயல்புகளுள் ஒன்று. இது ஒவ்வொருவரையும் சூழ்ந்துள்ளது. இங்கு யாருக்கும் நிச்சயம் என்பது இல்லை. அடுத்த நிமிடம் என்ன நிகழும்? என்ன மாற்றங்கள் நிகழும்? எந்தத் துன்பம்…

வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கும் இழிபிறவிகள்

இஸ்லாம் குறித்து ஆட்சேபனைகளை முன்வைப்பவர்கள் பல வகையினர். ஒரு வகையினர், உண்மையிலேயே சந்தேகத்தில் உழல்பவர்கள். அவர்கள் அந்த ஆட்சேபனைகளுக்கு தங்களின் மனம் திருப்தியுறும் பதில்களை விரும்புகிறார்கள். அவர்கள் பொருட்படுத்தத்தகுந்தவர்கள். நாம் அவர்களைப் பொருட்படுத்தவில்லையெனில் அவர்கள் நம்மைவிட்டு விலகிச் செல்லக்கூடும். இன்னொரு வகையினர்,…

உன் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்

உங்கள் உள்ளங்களிலுள்ள அழுக்குகளை நீங்கள் நீக்கிவிட்டால் யாரும் போதிக்காமலேயே அவற்றில் இறைத்தூதர்களின் போதனைகளை நீங்கள் காண்பீர்கள் என்கிறார் ஜலாலுத்தீன் ரூமி. யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே சரி எது, தவறு எது என்று பிரித்து அறியும் பக்குவம் மனித உள்ளத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இஸ்லாம்…

பொறாமைக்காரன்

“பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும்போது ஏற்படும் தீங்கிலிருந்து நான் பாதுகாவல் தேடுகிறேன்” பொறாமை ஒரு மோசமான குணம். அது மனிதனை ஷைத்தானாக மாற்றி விடும் தன்மை கொண்டது. பொறாமைக்காரன் மன நிறைவு அடைய முடியாது. அவன் யார் மீது பொறாமை கொண்டோனோ அவர்…

அவசரக்குடுக்கை

மனிதன் அவசரப்படக்கூடியவனாக இருக்கிறான் என்கிறது திருக்குர்ஆன். அவசரம் அவனது இயல்பில் உள்ள ஒன்று. ஆனாலும் அந்த அவசரத்திற்கு கட்டுப்படாமல் நிதானமாகச் செயல்படுபவர்களே அதன் பாதிப்புகளிலிருந்து தப்புகிறார்கள். உணர்ச்சி மேலிடும்போது மனிதன் அவசரக்காரனாக மாறுகிறான். அவசரப்பட்டு அளவுகடந்து புகழ்கிறான். அவசரப்பட்டு சாபம் இடுகிறான்.…

அதிக வெளிச்சம்

என் மனம் அவரிடம் கேட்டது: உங்களை இந்த அளவு அதிகமாக வெளிப்படுத்துகிறீர்களே? அதனால் நீங்கள் பெறும் பயன்தான் என்ன? மக்கள் உங்களைக் குறித்து பேசிக்கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அல்லது அதன்மூலம் யாருக்கேனும் பயனளிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? இல்லை, அப்படி…

இஸ்லாம் என்பது

மார்க்கம் என்பது ஒரு வழிமுறை. அது எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வழிகாட்டுகிறது. இங்கு பல வகையான மார்க்கங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் இயல்புக்கு உகந்த, தாங்கள் சரியெனக் கருதும் ஒரு மார்க்கத்தைப் பின்பற்றுகிறார்கள். சிலர் எந்த மார்க்கத்தையும் பின்பற்றாமல் கட்டுப்பாடுகள்…