அநியாயக்காரர்கள் மோசமான விளைவை சந்திப்பார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அநியாயக்காரர்களால் நீடித்த வெற்றியை பெற முடியாது. அநியாயம் இவ்வுலகில் செயல்படும் நியதிகளுக்கும் மனிதனுக்குள் செயல்படும் நியதிகளுக்கும் எதிரானது. அநியாயம் மகிழ்ச்சியையோ நிம்மதியையோ கொண்டு வராது. அநியாயம் அதைவிட மோசமான அநியாயத்தைக் கொண்டுவரும். அநியாயக்காரர்கள் தங்களைவிட வலிமையான அநியாயக்காரர்களால் வீழ்த்தப்படலாம்.
இவ்வுலகில் இறைவன் அமைத்த நியதிகளின்படி வெளிப்படையான காரணிகளை அப்படியே அச்சுப்பிசகாமல் பின்பற்றினாலும் அநியாயக்காரர்களால் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது. அவர்களால் தற்காலிக வெற்றிகளைத்தவிர நீடித்த வெற்றியைப் பெற முடியாது. அவர்கள் பெறக்கூடிய தற்காலிக வெற்றிகள் அவர்களை ஒருவித மயக்கத்தில், தாங்கள் செய்வது சரிதான் என்ற எண்ணத்தில் ஆழ்த்தி விடுகின்றன.
“மனிதர்களே! நாம் உங்களை ஒரே ஆண், பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளும்பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அவனை அதிகம் அஞ்சுபவர்தாம். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் நுட்பமாகத் தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.” (49:13) குலம் குலமாகப் பிரிந்து அற்ப காரணங்களுக்காக ஒருவருக்கொருவர்
கருத்துச் சுதந்திரம் பேசுவோர் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானவர்களாக மாறுவது விசித்திரமான ஒன்று. ஆனாலும் பெரும்பாலும் அப்படித்தான் நிகழ்கிறது. வரலாற்றில் இப்படிப்பட்டவர்களே நிரம்பக் காணப்படுகிறார்கள் என்கிறார் அஹ்மது அமீன். அதிகாரம் அற்றவனுக்கு, ஒடுக்கப்படுவனுக்கு கருத்துச் சுதந்திரம் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் அவன் அதிகாரத்தை பெற்றுவிட்டால், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட்டால்
பாராட்டுவதற்கும் ஒரு பெரிய மனது வேண்டும். அற்பர்கள் யாரையும் பாராட்ட மாட்டார்கள். சிறப்புகள் அனைத்தும் தங்களுக்கு மட்டுமே உரியது என்ற சுயநலமும் கஞ்சத்தனமும் அவர்களின் உள்ளங்களை ஆக்கிரமித்திருக்கும். அவர்களுக்குத் தெரிவதெல்லாம் மற்றவர்களின் குறைகள் மட்டுமே. மலையளவு நிறைகளுக்கு மத்தியில் மயிரளவு குறைகள்தான் அவர்களின் கண்களுக்குத் தெரியும். பலர் பாராட்டுதலுக்கும்
வெகுஜன உணர்வுகளுக்குத் தீனியிடும் அமைப்புகளே மிக விரைவில் வளர்ச்சியடைகின்றன. அவர்கள் எப்படிப்பட்டவர்களாக, எந்த நோக்கம் கொண்டவர்களாக இருந்தாலும் பெரும்பாலான மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணிதிரண்டு விடுவார்கள். வெகுஜனங்களின் ஆதரவைப் பெற, தங்கள் உறுப்பினர்கள் தங்களைவிட்டும் சென்றுவிடாமல் காக்க பெரும்பாலான அமைப்புகள் இத்தகைய போக்கையே கடைப்பிடித்து வருகின்றன. சாத்வீகமான, அறிவுப்பூர்வமான
கடும்போக்கு என்று நான் குறிப்பிடுவது, ஒருவர் தாம் சரியென நம்பும் கருத்தை மற்றவர்களின் மீது வலுக்கட்டாயமாக திணிக்க முற்படுவதும் மற்றவர்களின் கருத்தை மூர்க்கமாக மறுப்பதும் அதற்காக அவர்களுடன் பகைமை பாராட்டுவதும் ஆகும். கருத்து வேறுபடுவது மனித இயல்பு. மனிதர்கள் தங்களுடைய விவகாரங்கள் அனைத்திலும் கருத்துவேறுபட்டுக் கொண்டேயிருப்பார்கள். மனிதனின் அடிப்படையான
ஆதாரம் எதற்குத் தேவைப்படுகிறது? ஒரு விசயத்தை மக்களின் முன்னால் நிரூபிப்பதற்கு, மற்றவர்களை வாயடைக்கச் செய்வதற்கு. நீங்கள் ஒரு விசயத்தை நம்ப வேண்டும் என்றால் அதற்கு ஆதாரம் அவசியமில்லை. ஆதாரத்திற்கும் நம்பிக்கைக்கும் மத்தியில் அவ்வளவு நெருக்கமான தொடர்பு எல்லாம் இல்லை. அந்த நம்பிக்கை முதலில் உங்களுக்குள் இருந்து உருவாகி வர
“எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னிக்கவில்லையென்றால், எங்கள் மீது கருணை காட்டவில்லையென்றால் நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்.” (7:23) இது ஆதம் (அலை) பாவம் செய்த பிறகு இறைவனிடம் மன்னிப்புக்கோரி செய்த பிரார்த்தனை. இதுதான் முதல் பிரார்த்தனையும்கூட. இறைவனின் கட்டளையை மீறுவது பாவம்
“நித்திய ஜீவனே! நிலையானவனே! உன் அருளை நான் வேண்டுகிறேன். என் விவகாரங்கள் அனைத்தையும் நீ சீர்படுத்துவாயாக. கண்சிமிட்டும் நேரம் அளவுக்குக்கூட என்னை என் மனதின் கட்டுப்பாட்டில் விட்டுவிடாதே” (நஸயீ, ஹாகிம்) காலையும் மாலையும் கேட்க வேண்டிய பிரார்த்தனைகளில் ஒன்றாக நபியவர்கள் இந்த பிரார்த்தனையை முன்வைக்கிறார்கள். இறைவனின் வல்லமையை, நம்