“உங்களிலுள்ள பலவீனர்களின் காரணமாகவே உங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கப்படுகிறது; நீங்கள் உதவி செய்யப்படுகிறீர்கள்.” தம் திறமையின் காரணமாகத்தான் தமக்கு எல்லாம் கிடைக்கிறது என்று எண்ணிய ஒருவருவருக்கு நபியவர்கள் கூறிய அறிவுரை இது. உங்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள பலவீனர்கள் உங்களுக்குச் சுமைகள் அல்ல. மாறாக அவர்களின் காரணமாக உங்களின் வாழ்வாதாரத்தில் விசாலம்
எல்லாவற்றுக்கும் நாம் விவாதித்துக் கொண்டிருக்க முடியுமா? விவாதத்தின் மூலம் நம்மால் ஒரு தீர்வை எட்டிவிட முடியுமா? விவாதம் தீர்வை நோக்கி இட்டுச்செல்லக்கூடியது அல்ல. அது முடிவிலியாக நீண்டு கொண்டே செல்லக்கூடியது. அது ஒரு வகையான கருத்தியல் யுத்தம். தோல்வியடைந்தவர்கள் காழ்ப்புகளை சுமந்துகொண்டு பின்வாசல் வழியாக அல்லது வேறொரு வடிவில்
லௌகீக வாழ்வில் மனிதன் தன்னை தொலைத்துவிட்டால் தன் ஆன்மீக வாழ்வை அவன் இழந்துவிடுவான். ஆன்மீக வாழ்வில் தன்னை தொலைப்பவன் தன் லௌகீகத்தை இழந்துவிடுவான். லௌகீகமும் ஆன்மீகமும் சரிவிகிதத்தில் கலந்த வாழ்வே மனிதனை சரியான நிலையில் நிலைநிறுத்த முடியும். இஸ்லாம் இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைக் கண்ணோட்டத்தையே முன்வைக்கிறது. அது எந்தச்
ஈமான் என்பது வெறும் வார்த்தைகளை சடங்குத்தனமாக உச்சரிப்பதோ குருட்டுத்தனமாகப் பின்பற்றும் நம்பிக்கையோ அல்ல. ஈமான் என்ற வார்த்தைக்கு நம்பிக்கைகொள்வது, ஏற்றுக்கொள்வது என்று பொருள். அது அல்லாஹ்வை அவனுடைய அத்தனை பண்புகளுடனும் முழுமையாக ஏற்றுக் கொள்வது, அவனுடைய விதியை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு அதில் திருப்தியடைவது. தாய்தந்தையரின் நம்பிக்கையை ஆராயாமல்
பெரிய மனிதர்களின் சுயசரிதைகளை படிக்க வேண்டும் என்று நாம் ஆவல் கொள்வதுண்டு. இங்கு பெரிய மனிதர்கள் என்ற பிம்பம் ஒவ்வொருவருடைய கண்ணோட்டத்தைப் பொறுத்தும் மாறுபடக்கூடியது. அந்த மனிதர்கள் அந்த அளவுக்கு உயர்ந்ததற்கான காரணிகள் அவர்களின் சுயசரிதைகளில் காணப்படலாம் என்ற காரணமும் நம் ஆவலுக்குப் பின்னால் இருக்கலாம். ஆனால் பல
விசாலமான வாசிப்பு ஒரு மனிதனை கடும்போக்குவாதத்திலிருந்தும் குறுகிய சிந்தனையிலிருந்தும் விடுவிக்கலாம். அறியாமையும் அறைகுறையான, மேம்போக்கான அறிதலும் கடும்போக்குவாத்தின் பக்கம் மனிதர்களை இட்டுச்செல்லக்கூடியவை. பொதுவாக கடும்போக்குவாதிகள் தங்களின் வட்டத்தைத் தாண்டி எதுவும் வாசிப்பதில்லை அல்லது எதுவும் வாசிப்பதே இல்லை. அதிகபட்சம் தங்கள் இயக்கத்தை, சிந்தனைப் பள்ளியைச் சார்ந்தவர்களின் உரைகளைக் கேட்பதோடு
அநியாயக்காரர்கள் மோசமான விளைவை சந்திப்பார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அநியாயக்காரர்களால் நீடித்த வெற்றியை பெற முடியாது. அநியாயம் இவ்வுலகில் செயல்படும் நியதிகளுக்கும் மனிதனுக்குள் செயல்படும் நியதிகளுக்கும் எதிரானது. அநியாயம் மகிழ்ச்சியையோ நிம்மதியையோ கொண்டு வராது. அநியாயம் அதைவிட மோசமான அநியாயத்தைக் கொண்டுவரும். அநியாயக்காரர்கள் தங்களைவிட வலிமையான அநியாயக்காரர்களால் வீழ்த்தப்படலாம்.
இவ்வுலகில் இறைவன் அமைத்த நியதிகளின்படி வெளிப்படையான காரணிகளை அப்படியே அச்சுப்பிசகாமல் பின்பற்றினாலும் அநியாயக்காரர்களால் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது. அவர்களால் தற்காலிக வெற்றிகளைத்தவிர நீடித்த வெற்றியைப் பெற முடியாது. அவர்கள் பெறக்கூடிய தற்காலிக வெற்றிகள் அவர்களை ஒருவித மயக்கத்தில், தாங்கள் செய்வது சரிதான் என்ற எண்ணத்தில் ஆழ்த்தி விடுகின்றன.
“மனிதர்களே! நாம் உங்களை ஒரே ஆண், பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளும்பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அவனை அதிகம் அஞ்சுபவர்தாம். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் நுட்பமாகத் தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.” (49:13) குலம் குலமாகப் பிரிந்து அற்ப காரணங்களுக்காக ஒருவருக்கொருவர்
கருத்துச் சுதந்திரம் பேசுவோர் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானவர்களாக மாறுவது விசித்திரமான ஒன்று. ஆனாலும் பெரும்பாலும் அப்படித்தான் நிகழ்கிறது. வரலாற்றில் இப்படிப்பட்டவர்களே நிரம்பக் காணப்படுகிறார்கள் என்கிறார் அஹ்மது அமீன். அதிகாரம் அற்றவனுக்கு, ஒடுக்கப்படுவனுக்கு கருத்துச் சுதந்திரம் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் அவன் அதிகாரத்தை பெற்றுவிட்டால், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட்டால்