ஆரோக்கியம் அளப்பரிய அருட்கொடை என்பதை அதை இழந்த பிறகுதான் தெளிவாகப் புரிந்து கொள்கிறோம். அறபு மொழியில் ஆஃபியா என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அது எல்லா வகையான ஆரோக்கியத்தையும் குறிக்கும் ஒரு செறிவான வார்த்தை. உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், அடிப்படையான உலகியல் வசதிகளைப் பெற்றிருப்பது, மார்க்க அடிப்படையில் பிறழ்வுகள்
பிறருக்குக் காட்ட வேண்டும், நேரடியாகவோ மறைமுகமாகவோ பெருமையடிக்க வேண்டும் என்ற நிலை இல்லாமல் இருந்தால் மனிதர்கள் மிக அவசியமான பணிகளோடு மட்டும் நின்று கொள்வார்கள். அவற்றைத் தாண்டி வேறு எந்தப் பணியிலும் ஈடுபட மாட்டார்கள். பெரும்பாலான மனிதர்கள் தங்களுக்காக செயல்படுவதைக் காட்டிலும் தங்களை மற்றவர்களின் முன்னால் நிரூபிக்க வேண்டும்,
நான் அவரை முன்னரே அறிவேன். அவர் இப்போது முழுமையாக மாறிவிட்டார் என்பதை உணர்கிறேன். உண்மையில் அவர் மாறிவிட்டரா அல்லது என் பார்வைதான் மாறிவிட்டதா என்று உறுதியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனாலும் முன்னர் அவர் அப்படி இருக்கவில்லை. உற்சாகமானவராக, உற்சாகப்படுத்தக்கூடியவராகத்தான் இருந்தார். உற்சாகமானவர்கள் பழகுவதற்கு இலகுவானவர்களாகவும் இருப்பார்கள். அவர்களின் உற்சாகம்
அவமானப்படுத்தப்பட்ட மனிதர்களிடம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் ஏற்பட்டுவிடுகிறது. தங்களை அவமானப்படுத்தியவர்களுக்கு முன்னால், தங்களைப் பொருட்படுத்தாதவர்களுக்கு முன்னால் தாங்கள் வாழ்ந்து காட்டியே தீர வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்கிறார்கள். அப்படி வாழ்ந்து காட்டுவதையே தங்கள் வாழ்வின் இலட்சியமாக அவர்கள் ஆக்கிக் கொள்கிறார்கள். பெரும்பாலும் அவ்வாறு அவமானப்படுத்துபவர்கள்
வாசிக்கும் பழக்கம் எனக்கு இயல்பாகவே இருக்கிறது. இந்த பழக்கம் எப்படி என்னிடம் தொற்றிக் கொண்டது என்று எனக்குத் தெரியவில்லை. எந்த பேப்பரைக் கண்டாலும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் சிறு வயதில் மிக அதிகமாக இருந்தது என்பது மட்டும் இப்போது நினைவுக்கு வருகிறது. என்னைச் சுற்றியிருந்த யாரிடமும் வாசிப்புப்
மனதிற்குத் தெளிவாகத் தெரியும், நட்பு கொள்வதற்காக, உறவைப் பலப்படுத்துவற்காக, நட்பையும் உறவையும் தக்கவைத்துக் கொள்வதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது. நாம் ஒருவருடன் நட்பை, உறவை விரும்புகிறோம் எனில் நாம் ஒருவருடைய நட்பை, உறவை தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறோம் எனில் அதற்கு இசைவான, உகந்த வார்த்தைகளும் செயல்களும்தான் நம்மிடமிருந்து
மகிழ்ச்சியளித்து மகிழ்தல் என்பது உன்னதமான ஆன்மிக அனுபவங்களுள் ஒன்று. இறைவன் இந்த உலகில் அமைத்த நியதிகளுள் இதுவும் அடங்கும். தேவையுடையவர்களுக்கு, சிரமப்படுபவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி இருக்கிறது. இங்கு மனிதர்கள் யாருடைய உதவியும் இன்றி தனித்து வாழ முடியாது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் சார்ந்து வாழக்கூடியவர்கள். சார்பு வாழ்க்கை இங்கு அவசியமான
உடல் காயமடைவது போன்று மனமும் காயமடைகிறது. உடலில் ஏற்படும் காயம் வெளியில் தெரியக்கூடியதாக இருப்பதால் அதனை எளிதாக நாம் புரிந்து கொள்கின்றோம். காயமுற்றவர்களை நாம் பரிவோடு நடத்துகின்றோம். அவர்களை மற்ற மனிதர்களைப் போன்று கருதுவதில்லை. ஆனால் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை நாம் அவ்வாறு நடத்துவதில்லை. அவர்களின் காயம் வெளிப்படையாகத் தெரியக்கூடியதல்ல
ஒரு மனிதனுடன் தனியாக விவாதிப்பது வேறு. ஒரு சபையில் மக்களுக்கு முன்னிலையில் அவனுடன் விவாதிப்பது வேறு. ஒரு மனிதனுக்கு தனியாக அறிவுரை கூறுவது வேறு. மற்ற மனிதர்களுக்கு முன்னால் அவனுக்கு அறிவுரை கூறுவது வேறு. தனியாக விவாதிக்கும்போது அவனுக்கு பெரிய அளவில் நிர்ப்பந்தம் இருப்பதில்லை. அவனுடைய ஈகோ கூர்மையாகவும்
வஹியும் அறிவும் ஒன்றுடன் ஒன்று முரண்படக்கூடியதல்ல. ஒன்று மற்றொன்றை வலுப்படுத்தக்கூடியது. இரண்டையும் ஒன்றுக்கொன்று முரணானவையாக நிறுத்துவது மடமைத்தனம். மனித உள்ளத்தில் சரியை சரியென, தவறை தவறென உணர்ந்து கொள்ளும் பக்குவம் இருக்கிறது. அந்தப் பக்குவம் பாவக்கறைகளினால், பிறழ்வுகளினால் மாசடையலாம். அதனால் நீங்கள் பிறழ்வுகளை சரியானவை என்றும் சரியானவற்றை பிறழ்வுகள்