முகப்பு

நிச்சயமின்மை

நிச்சயமின்மை உங்களைச் சூழ்ந்திருக்கிறது. எப்படி உங்களால் நிம்மதியாக இருக்க முடிகிறது? நிச்சயமின்மை இந்த உலகின் இயல்புகளுள் ஒன்று. இது ஒவ்வொருவரையும் சூழ்ந்துள்ளது. இங்கு யாருக்கும் நிச்சயம் என்பது இல்லை. அடுத்த நிமிடம் என்ன நிகழும்? என்ன மாற்றங்கள் நிகழும்? எந்தத் துன்பம் வந்தடையும்? என்று யாருக்கும் தெரியாது. நாம்

வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கும் இழிபிறவிகள்

இஸ்லாம் குறித்து ஆட்சேபனைகளை முன்வைப்பவர்கள் பல வகையினர். ஒரு வகையினர், உண்மையிலேயே சந்தேகத்தில் உழல்பவர்கள். அவர்கள் அந்த ஆட்சேபனைகளுக்கு தங்களின் மனம் திருப்தியுறும் பதில்களை விரும்புகிறார்கள். அவர்கள் பொருட்படுத்தத்தகுந்தவர்கள். நாம் அவர்களைப் பொருட்படுத்தவில்லையெனில் அவர்கள் நம்மைவிட்டு விலகிச் செல்லக்கூடும். இன்னொரு வகையினர், எதிரிகள் இஸ்லாம் குறித்து முன்வைக்கும் ஆட்சேபனைகளை

உன் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்

உங்கள் உள்ளங்களிலுள்ள அழுக்குகளை நீங்கள் நீக்கிவிட்டால் யாரும் போதிக்காமலேயே அவற்றில் இறைத்தூதர்களின் போதனைகளை நீங்கள் காண்பீர்கள் என்கிறார் ஜலாலுத்தீன் ரூமி. யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே சரி எது, தவறு எது என்று பிரித்து அறியும் பக்குவம் மனித உள்ளத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இஸ்லாம் என்பது இறைவன் மனிதனுக்கு வழங்கிய வழிகாட்டல்.

பொறாமைக்காரன்

“பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும்போது ஏற்படும் தீங்கிலிருந்து நான் பாதுகாவல் தேடுகிறேன்” பொறாமை ஒரு மோசமான குணம். அது மனிதனை ஷைத்தானாக மாற்றி விடும் தன்மை கொண்டது. பொறாமைக்காரன் மன நிறைவு அடைய முடியாது. அவன் யார் மீது பொறாமை கொண்டோனோ அவர் அடையும் வீழ்ச்சிதான் அவனை அமைதிப்படுத்தும். உண்மையில்

அவசரக்குடுக்கை

மனிதன் அவசரப்படக்கூடியவனாக இருக்கிறான் என்கிறது திருக்குர்ஆன். அவசரம் அவனது இயல்பில் உள்ள ஒன்று. ஆனாலும் அந்த அவசரத்திற்கு கட்டுப்படாமல் நிதானமாகச் செயல்படுபவர்களே அதன் பாதிப்புகளிலிருந்து தப்புகிறார்கள். உணர்ச்சி மேலிடும்போது மனிதன் அவசரக்காரனாக மாறுகிறான். அவசரப்பட்டு அளவுகடந்து புகழ்கிறான். அவசரப்பட்டு சாபம் இடுகிறான். யாரை அவன் புகழ்ந்தானோ அவர்களை ஒரு

அதிக வெளிச்சம்

என் மனம் அவரிடம் கேட்டது: உங்களை இந்த அளவு அதிகமாக வெளிப்படுத்துகிறீர்களே? அதனால் நீங்கள் பெறும் பயன்தான் என்ன? மக்கள் உங்களைக் குறித்து பேசிக்கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அல்லது அதன்மூலம் யாருக்கேனும் பயனளிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? இல்லை, அப்படி எந்த நோக்கமும் இல்லை. எனக்கு பெருமித

இஸ்லாம் என்பது

மார்க்கம் என்பது ஒரு வழிமுறை. அது எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வழிகாட்டுகிறது. இங்கு பல வகையான மார்க்கங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் இயல்புக்கு உகந்த, தாங்கள் சரியெனக் கருதும் ஒரு மார்க்கத்தைப் பின்பற்றுகிறார்கள். சிலர் எந்த மார்க்கத்தையும் பின்பற்றாமல் கட்டுப்பாடுகள் அற்ற ஒரு வாழ்க்கையை வாழ்கிறார்கள். முஸ்லிம்களாகிய

ஆன்மாவின் இன்பம்

அன்பு என்றால் அது உங்களை மகிழ்விக்கும் என்பது மட்டுமல்ல. சில சமயங்களில் உங்களுக்குச் சிறைச்சாலையாகவும் அமைந்துவிடுவதுண்டு. அதன் மற்றொரு புறம் கோபமும் வெறுப்பும் அதீத உரிமையும் இருக்கின்றன. இங்கு எந்தவொன்றும் இலவசமாகக் கிடைத்துவிடாது. அதற்குப் பகரமாக ஏதேனும் ஒன்றை நீங்கள் வழங்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒன்றை நீங்கள்

ஆதிக்க வெறியும் கர்வமும்

மனிதர்களுக்கு தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது. செல்வம், அறிவு, பதவி, அதிகாரம், மதம், சாதி, குலம் என எதையாவது அவர்கள் அதற்குப் பயன்படுத்தவே செய்கிறார்கள். இவையனைத்துக்கும் பின்னால் ஒளிந்திருப்பது தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற ஆதிக்க வெறியே. சாதியை ஒழித்துவிட்டால் சமத்துவம் நிலைநாட்டப்பட்டுவிடும் என்று

ஒளியின் மீது ஒளி

மனதில் பயம் தொற்றிக் கொண்டால் வாழ்க்கை நரகமாகி விடும். உறுதியான நம்பிக்கையைக் கொண்டே அந்த பயத்தை நீக்க முடியும். அது நம்மைப் படைத்துப் பராமரிக்கும் பேரிறைவனின் மீதான உறுதியான நம்பிக்கை. அவன் நம்மைக் கைவிட மாட்டான் என்னும் வலுவான நம்பிக்கை.   அந்தப் பேரிறைவனை விட்டுவிட்டு நீங்கள் எதைப்