முகப்பு

உறவுப் பாலத்தின் அடித்தளம்

ஒருவர் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கை நமக்குப் பெரும் பலம் மட்டுமல்ல பலவீனமும்கூட. அந்த நம்பிக்கையை காப்பாற்றுவதற்கு நாம் பெரிதும் மெனக்கெட வேண்டும். நம்முடைய தான்தோன்றித்தனமான செயல்பாடுகளை ஒழுங்குபடுத்திட வேண்டும். விரும்பியோ விரும்பாமலோ சமூகம் விதித்திருக்கும் வரையறைகளைப் பின்பற்ற வேண்டும். அந்த நம்பிக்கை அவ்வளவு எளிதாக உருவாகிவிட முடியாது.

குடும்பம் என்னும் வலுவான உந்து சக்தி

நாம் தொடர்ந்து தொய்வடையாமல் இயங்குவதற்கு நம் மீது சுமத்தப்படும் பொறுப்புகளுக்கு முதன்மையான பங்கு உண்டு. பொறுப்புகள் சுமைகள் அல்ல. நாம் முன்னேறிச்செல்வதற்கு பல வகையில் அவை காரணமாகின்றன. அவை இல்லையெனில் நாம் தேக்கமடைந்து விடுவோம். ஒரு வகையில் அவை சுமைகளாக இருந்தாலும் தேவையற்ற சுமைகளைப் போக்கும் பயனுள்ள சுமைகளாக

மனித வாழ்வில் புகுந்துகொள்ளும் இருள்

மனிதர்களின் வாழ்வில் திடீரென புகுந்துகொள்ளும் இருட்டு பற்றி அறிவீர்களா? அது சம்பந்தப்பட்ட மனிதரை மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்பத்தையும் நாசப்படுத்தி விடுகின்றது. அந்த இருட்டு ஏதேனும் ஒரு வடிவில் அவனுடைய வாழ்வில் மெல்ல நுழைகிறது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவனை ஆக்கிரமித்து அடிமைப்படுத்தி அவனை மட்டுமல்லாமல் அவனைச் சார்ந்தவர்களையும் மூழ்கடிக்கத்

ஆன்மீகத்தின் உச்சம்

இஸ்லாம் சொல்லக்கூடிய நற்செயல்களின், வணக்க வழிபாடுகளின் ஆன்மா ‘இக்லாஸ்’ ஆகும். இக்லாஸ் என்பது வேறு எந்த நோக்கத்தையும் கலக்காமல் இறைவனுக்காக மட்டுமே செயல்படுவதாகும். இதுதான் இஸ்லாம் சொல்லக்கூடிய ஆன்மீகத்தின் உன்னதமான நிலை. புகழடைய வேண்டும், செல்வத்தைப் பெற வேண்டும், மக்களிடம் நன்மதிப்பை, அங்கீகாரத்தைப் பெற வேண்டும், சிறந்த சமூக

பொறாமையும் அகங்காரமும்

மற்றவர்களுடன் ஒப்பிடப்பட்டு குறைகூறப்படும் மனிதர்கள் தாழ்வு மனப்பான்மைக்கோ தீவிர வெறுப்புணர்ச்சிக்கோ ஆளாகிறார்கள். இந்த வகையான ஒப்பீடு குழந்தைகளின் மனநிலையைப் பாதிக்கும்; தம்பதிகளின் மணவாழ்வை நாசமாக்கும்; மனிதர்களை தேவையற்ற கவலைகளுக்கு ஆளாக்கும். இவ்வாறான ஒப்பீடுகளில் ஈடுபட்டு மற்றவர்களை குறைகூறக்கூடிய மனிதர்கள் இறைவன் அமைத்த இயற்கையமைப்பை புரிந்துகொள்ளாத மூடர்களாவர். ஒவ்வொரு உயிரினமும்

தனிமையும் வெறுமையும்

தனிமை சில சமயங்களில் வரமாக அமைந்தாலும் பல சமயங்களில் சாபமாக அமைந்துவிடுகிறது. தனிமை மனிதனை தவறு செய்ய, பாவங்களில் ஈடுபடத் தூண்டுகிறது. மற்றவர்களின் முன் செய்வதற்கு வெட்கப்படும் செயல்களை தனிமையில் மிகச்சாதாரணமாக மனிதன் செய்துவிடுகிறான். இறையச்சம் மனிதனைப் பாதுகாக்கும் மிகச்சிறந்த கேடயம். இறைவன் மீதான பயம் எந்த அளவு

தூக்கமும் மனம் அடையும் அமைதியும்

இஸ்லாம் தூக்கத்தை சிறு மரணம் என்று வர்ணிக்கிறது. தூக்கத்தில் மனிதனின் ஆன்மா கைப்பற்றப்படுகிறது. பின்னர் அது திருப்பி அனுப்பப்படுகிறது. யாருக்கு இறைவன் மரணத்தை விதித்து விடுகிறானோ அவரது ஆன்மா திருப்பி அனுப்பப்படுவதில்லை. மரணம் என்பது பெரிய தூக்கம். அதில் ஆன்மா நிரந்தரமாக கைப்பற்றப்படுகிறது. தூங்கும்பொழுது நம்பிக்கையாளன் குறிப்பிடும், “அல்லாஹ்வே!

நிலையற்ற மனம்

மனிதன் இங்கும் அங்கும் தடுமாறக்கூடியவன்தான். மிருக உணர்ச்சி அவனை கீழ்நோக்கி இழுக்கும். உன்னதத்தை நோக்கிய ஆவல் அவனை மேல் நோக்கி இழுக்கும். அதாவது உடலின் இச்சைக்குக்கும் ஆன்மாவின் விருப்பத்திற்கும் மத்தியில் ஒரு இழுபறி இருந்துகொண்டேயிருக்கும். இங்கு நம்பிக்கையாளன் என்பவன் பாவம் செய்யாத புனிதன் அல்ல. மிருக உணர்ச்சி அவனை

உடைதல்

எனக்குத் தெரிந்தவன்தான் அவன். தன் அம்மா திடீரென இறந்தபோது அவன் அழாமல் இருந்தான். ஏன் அவனுக்கு அழுகை வரவில்லை? அம்மாவுடன் மிகவும் பாசமாக இருந்த பிள்ளைதானே அவன்? என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். மய்யித்தை தூக்கி அடக்கம் செய்வதற்காக கொண்டு சென்றபோது அவன் வெடித்து அழுத் தொடங்கினான். திடீரென

சமநிலை குலைவு

மனப்பிறழ்வு கொண்டவர்களை பொதுவாக இரு வகையாகப் பிரிக்கலாம். ஒரு வகையினர், தங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை, தாங்கள் இயல்பாக இல்லை என்பதை, தங்களுக்கு சிகிச்சை அவசியம் என்பதை உணர்பவர்கள். இன்னொரு வகையினர், தங்களுக்கு மனரீதியாக பிரச்சனைகள் இருந்தும் அவற்றில் எதையும் உணராமல் தாங்கள் இயல்பாக இருப்பதாக எண்ணிக்கொள்பவர்கள். இந்த இரண்டாவது