குறும்பதிவுகள்

கண்ணோட்டங்கள்

ஒருவர் எப்படிப்பட்டவரோ அதற்கேற்ப அவருக்கான நண்பர்கள் அமைந்து விடுவார்கள் அல்லது அவர் அதற்கேற்ப தமக்கான நண்பர்களை அமைத்துக் கொள்வார். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன் மனதளவில் நட்பு கொள்கிறான் எனில் இருவரையும் இணைக்கக்கூடிய பொதுவான ஓர் அம்சம் இருக்கிறது என்று பொருள். ஒரு மனிதன் கொண்டிருக்கும் கண்ணோட்டங்களுக்கும் அவனுடைய

சுமூகமான குடும்ப வாழ்வு

குடும்ப வாழ்வு சுமூகமாகச் செல்வதற்குப் பின்னால் நேரடியான அல்லது மறைமுகமான சர்வாதிகாரமும் நிர்ப்பந்தமும் இருக்கின்றன. இரு சமமான மனிதர்கள் நீண்ட நாட்கள் ஒன்றுசேர்ந்து இருக்க முடியாது. இருவரிடமும் காணப்படும் கூர்மையான ஈகோ அவர்களைப் பிரித்து விடும். ஆனாலும் அவர்கள் ஓர் இடைவெளியோடு சேர்ந்திருக்க முடியும். ஒருவர் ஆதிக்கம் செலுத்துபவராக

திருமண வாழ்க்கை

திருமண வாழ்க்கை நீடிப்பது வெறுமனே அன்பின் அடிப்படையில் அல்ல. அன்பு ஆரம்ப நிலைக் காரணியாக இருக்கலாம். பெரும்பாலும் அது ஆரம்ப நிலைக் காரணியாக மட்டுமே இருக்கும். அன்பு ஒரே நிலையில் அப்படியே நீடிக்கக்கூடியது அல்ல. அது தற்காலிகமானது; மாறக்கூடியது; இடம்பெயரக்கூடியது. வெறுமனே அன்பின் அடிப்படையில் மட்டுமே மணவாழ்க்கை நிலைபெற

துரோகம்

ஆணும் பெண்ணும் இணைந்திருப்பதற்கு ஒருவர் மற்றவருக்கு விசுவாசமாக இருப்பதும் ஒருவர் மற்றவரைச் சார்ந்திருப்பதும் மிகவும் அவசியம். அந்த விசுவாசமே குடும்ப வாழ்வுக்கான அடித்தளம். அப்படியில்லாத பட்சத்தில் ஒருவர் இன்னொருவரைச் சார்ந்திருக்கவில்லையெனில் வேறு ஏதேனும் நிர்ப்பந்தம் இல்லையெனில் அவர்கள் விலகிச் சென்று விடுவார்கள். கள்ளக்காதலும் முறையற்ற உறவுகளும் குடும்ப வாழ்வின்

மலட்டு விவாதம்

மலட்டு விவாதம் என்ற தலைப்பில் எகிப்திய எழுத்தாளர் அஹ்மது அமீனின் கட்டுரை ஒன்று இருக்கிறது. தலைப்பே கட்டுரையின் கருவை கச்சிதமாக சொல்லி விடுகிறது. ஒரு விசயத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு, அதன் சாதக, பாதக அம்சங்களை அலசுவதற்கு விவாதங்கள் பயனளிக்கலாம். விவாதத்திற்கான எல்லை இதுதான். இந்த எல்லையில் நின்று,

காதல் வயப்படுவது…

மனிதர்கள் காதல்வயப்படுவது எதிர்பாராத, அற்புதமான ஒரு நிகழ்வுதான். தான் அனுபவிக்கும் ஆரம்பகட்ட இனிமையை மனிதன் மீண்டும் அனுபவிக்க முடியுமா என்று தெரியவில்லை. அது எல்லாவற்றையும் மறக்கடித்து விடும் உச்சகட்ட போதை. அந்த போதையில் பலர் தங்களின் நெருங்கிய நண்பர்களை, உறவினர்களை இழக்கிறார்கள். அது ஒரு குறிப்பிட்ட காலம்வரை நீடிக்கும்