குறும்பதிவுகள்

தேவையற்ற பயம்

நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருந்து விட்டால் அடுத்து ஒரு துன்பம் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. என்னுடைய இந்த பயம் எதிர்மறைச் சிந்தனையின் விளைவா? மனித வாழ்க்கையில் மகிழ்ச்சியும் துன்பமும் மாறிமாறி வரக்கூடியவை. மகிழ்ச்சிக்குப் பிறகு துன்பம் வரலாம். துன்பத்திற்குப் பிறகு மகிழ்ச்சி ஏற்படலாம். மகிழ்ச்சியுடன் துன்பமும் இருக்கலாம்.

புறக்கணிப்பின் வலி

நெருங்கிய உறவுகளிடமிருந்து உணரும் புறக்கணிப்பின் வலியை எப்படி எதிர்கொள்வது? மனிதர்கள் ஒருவர் மற்றவரைச் சார்ந்து வாழக்கூடியவர்கள் என்பதை ஒருவர் மற்றவரைச் சுரண்டி வாழக்கூடியவர்கள் என்றும் கூறலாம். இரண்டுக்கும் மத்தியில் சிறிய அளவுதான் வேறுபாடு காணப்படுகிறது. சில சமயங்களில் இரண்டும் ஒன்றுபோலவே தோற்றம் தருகிறது. நாம் பிள்ளைகளை வளர்க்கிறோம். அது

கோபத்தைக் கட்டுப்படுத்துவது

நான் அதிகம் கோபம் கொள்கிறேன். அதனைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறை என்ன? நண்பர் ஒருவரின் கேள்வி இது. கோபத்திற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன. சில தற்காலிகமானவை. சில நிரந்தரமானவை. தற்காலிக காரணங்களினால் உருவாகும் கோபங்களிலிருந்து விடுபடுதல் எளிது. உடனுக்குடன் எதிர்வினை ஆற்றாமல் கொஞ்சம் தள்ளிப் போட்டாலே அவற்றுள் பெரும்பாலானவை

வார்த்தைகள்

வார்த்தைகளுக்குத்தான் எவ்வளவு பலம்! அதுவும் உரியவர்களிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள் அசுர பலம் கொண்டவையாக மாறிவிடுகின்றன. பயமும் பதற்றமும் கவலையும் உள்ளத்தின் நோய்கள். அவை உடலில் நோய்களை ஏற்படுத்தும் வலிமையான நோய்கள். நம்பிக்கையூட்டும், ஆறுதலளிக்கும் வார்த்தைகள் பயத்தை, பதற்றத்தை, கவலையைப் போக்கி விடுகின்றன. இந்த வகையில் வார்த்தைகள் அற்புதமான நிவாரணிகள்.

ஞானம் என்பது

கற்றுக் கொடுத்தலும் கற்றலின் ஒரு வகைதான். கற்கும்போது புரியாத சில விசயங்கள் கற்றுக்கொடுக்கும்போது தெளிவாகப் புரிகின்றன. எனக்கு எழுதும்போதும் அப்படித்தான். அதுவரை புரியாத சில விசயங்கள் எனக்கு எழுதும்போது புரிகின்றன. என் எழுத்திலிருந்து வெளிப்பட்டாலும் எனக்கு அது புதிய ஒன்றுதான். மொழிபெயர்த்தல் என்பது ஆழமான கற்றல். அது ஒரு

உளவறிதல்

ஒருவரை எந்த அளவு நெருங்குகிறாமோ அந்த அளவு அவரிடமிருந்து விலகியும் செல்வோம். அதீத நெருக்கம் கொஞ்சம் ஆபத்தானது. ஒருவரை முழுமையாக அறிந்துவிட்டால் அவரிடமிருந்து விலகிவிடுவோம் அல்லது அவர் மீது ஆதிக்கம் செலுத்த முற்படுவோம். நாம் அறியாத ஏதோ ஒன்று நம்மை ஈர்க்கிறது. அதனை அறிந்துவிட்டால் அந்த ஈர்ப்பு அகன்று