குறும்பதிவுகள்

மனச்சிக்கல் கொண்டவர்களின் புகார்கள்

மனச்சிக்கல் கொண்டவர்களுடன் சேர்ந்திருப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அவர்கள் தங்களின் பலவீனங்களை கச்சிதமாக மற்றவர்களின் பலவீனங்களாக முன்வைப்பார்கள். அவர்களால்தான் தாங்கள் இப்படி ஆகிவிட்டோம் என்பார்கள். மற்றவர்களைக் குறித்த அவர்களின் புகார்கள் நீண்டு கொண்டே செல்லும். உலகம் கெட்டு விட்டது, சமூகம் கெட்டு விட்டது, தாங்கள் மட்டுமே நேர்வழியில இருக்கிறோம்

கண்ணிருந்தும் குருடன்

“நீ ஒரு விசயத்தை உண்மையிலேயே விரும்பினால் ஒட்டுமொத்த பிரபஞ்சமும் அதை நோக்கி உன்னை நகர்த்திச் செல்லும்.” இது ரசவாதி என்ற நூலில் இடம்பெறும் வாசகம். இது இந்தப் பிரபஞ்சத்தில் அல்லாஹ் அமைத்த நியதிகளுள் ஒன்று. இந்தப் பிரபஞ்சம் நமக்கு எதுவும் தராது. இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்துப் பராமரித்துக் கொண்டிருக்கும்

நான் சுயம்பு

“நான் சுயம்பு. எனக்கென எந்த மரபும் ஆசிரியரும் இல்லை” இந்த வாசகத்தை அவர் பெருமிதமாகச் சொன்னாரா அல்லது இயல்பாகச் சொன்னாரா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் இது பெருமிதம்கொள்ளத்தக்க ஒன்று அல்ல; உதிரிகளிடமிருந்து வெளிப்படும் இயல்பான ஒரு சொல்தான். ஒருவனுக்கு எந்த ஆசிரியரும் இல்லை என்று

திருக்குர்ஆனின் ஓர் அற்புதம்

திருக்குர்ஆனை மேலோட்டமாகப் படித்துப் பார்க்கும்போது அதன் வசனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சிதறல்களாகத் தெரியும். அதனை முறையாகவும் ஆழ்ந்தும் படிப்பவர்கள் அதன் வசனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சிதறல்கள் அல்ல என்பதையும் அவை நுணுக்கமான இழைகளால் பின்னப்பட்டுள்ளவை என்பதையும் வசனங்களுக்கு இடையேயான நுணுக்கமான தொடர்புகள் அதன் மகத்தான அற்புதங்களில் ஒன்று என்பதையும்

கடக்க முடியாத கணமா அது?

“அந்த கணத்தை என்னால் அவ்வளவு எளிதாக கடக்க முடியவில்லை. வெறுமையும் அழுத்தமும் சலிப்பும் கடந்த உணர்வு அது. அந்த கணத்தில் செத்து விடலாமா என்று கூடத் தோன்றுகிறது. நான் என்ன செய்வது?“ ஏதோ ஒரு வகையில் மன அழுத்தமோ மனச் சிக்கலோ கொண்டவர்களுக்கு அவ்வப்போது ஏற்படக்கூடிய நிலைதான் இது.

ஆன்மாக்களின் உலகம்

“நான் மனிதர்களைப் பார்த்தவுடன் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று கணித்து விடுவேன்” உங்களின் இந்தக் கணிப்பை பொதுவான ஒன்றாக முன்வைக்க முடியாது. உங்களின் கணிப்பு உங்களுடன் ஒத்திசைந்து செல்பவர் யார், முரண்படுபவர் யார் என்பதை அறிந்துகொள்வதற்கு வேண்டுமானால் உங்களுக்குப் பயன்படலாம். பொதுவாக ஒருவரைப் பார்த்தவுடனேயே நமக்கு ஏற்படும் உணர்வு நமக்கும்