வட்டித் தொழிலும் தன்னல வெறியும்

தர்மம் செய்வதன் ஒழுங்குகள், நல்ல தர்மம் ஏற்படுத்தும் தாக்கங்கள், மோசமான தர்மம் ஏற்படுத்தும் விளைவுகள் ஆகியவை தெளிவுபடுத்தப்பட்ட பிறகு அதற்கு முற்றிலும் மாறான வட்டியைக் குறித்து பேசப்படுகிறது. முஸ்லிகள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் சமூகத்தினர். அவர்கள் மற்றவர்களின் துன்பங்களைக் கொண்டு பயனடையக்கூடியவர்கள் அல்ல.…

ஷைத்தானின் அச்சுறுத்தலும் அல்லாஹ்வின் வாக்குறுதியும்

கடந்த வசனங்களில் தர்மம் செய்வதன் ஒழுங்குமுறைகளும் அவை பின்பற்றப்படவில்லையெனில் ஏற்படும் விளைவுகளும் தெளிவுபடுத்தப்பட்ட பிறகு அடுத்த வரும் வசனங்களில் தர்மம் செய்யப்படும் பொருள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் இன்னும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில ஒழுங்குகள் குறித்தும் தெளிவுடுத்தப்படுகின்றன.…

உதவி செய்வதன் ஒழுங்குகள்

மீண்டும் அத்தியாயம் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதன் பக்கம் திரும்புகிறது. இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பலப்படுத்தும்பொருட்டு செய்யப்படும் செலவுகள் அனைத்தும் அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் செலவுகள்தாம். அவ்வாறு செலவு செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் அடுத்தடுத்த வசனங்களில் தெளிவுபடுத்தப்படுகின்றன. அவை நுட்பமான, ஆழமான…

மூன்று உதாரணங்கள்

யார் நேர்வழியை விரும்புகிறார்களோ அவர்கள் நிச்சயம் நேர்வழியை அடைவார்கள். நேர்வழியை விரும்பக்கூடியவர்களை அல்லாஹ் ஒருபோதும் கைவிட்டு விடுவதில்லை. நேர்வழியை விரும்பக்கூடியவர்களுக்குத்தான் அந்தப் பாதை தெளிவாகிக் கொண்டே செல்லும். அவர்கள் எல்லாவிதமான இருள்களிலிருந்தும் பாதுகாக்கப்படுவார்கள். நேர்வழியை விரும்பாதவர்கள் அதனைவிட்டு தூரமாகிக் கொண்டே செல்வார்கள்.…

ஆயத்துல் குர்ஸீ

மனிதர்கள் ஏன் அலட்சியமாக இருக்கிறார்கள்? அல்லாஹ்வைப் பற்றிய பிழையான கண்ணோட்டத்திலிருந்தே அவர்களின் அலட்சியம் உருவாகிறது. அவர்கள் அல்லாஹ்வை மனிதர்களைப் போன்ற பண்புகளைக் கொண்ட போலியான கடவுள்களைப் போன்றவன்தான் என்று எண்ணிக் கொள்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வைக் குறித்து சரியான முறையில் அறிந்து கொண்டால்…

செலவு செய்யுங்கள்

தூதர்கள் அவனுடைய தூதை சுமந்து வந்தவர்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான தனித்தன்மையைக் கொண்டவர்கள். அந்த தனித்தன்மைகள் அவர்கள் நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்கேற்ப, அவர்களின் காலகட்டத்திற்கேற்ப அவர்களுக்கு வழங்கப்பட்டவையாகும். அவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு மத்தியில் பாகுபாடு காட்டப்படக்கூடாது. அவர்கள் கொண்டு வந்த…

யூதர்களின் வாழ்க்கையிலிருந்து இரண்டு சம்பவங்கள்

திருமணம், தலாக் போன்ற குடும்பவியல் விவகாரங்கள் தெளிவுபடுத்தப்பட்ட பிறகு அத்தியாயம் மீண்டும் சமூகவியல் விவகாரங்களை நோக்கித் திரும்புகிறது. இந்த விவகாரங்கள் பேசப்படுவதற்கு முன்னர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுதல், அவன் பாதையில் செலவு செய்தல் தொடர்பாகத்தான் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. இடையில் அவசியமான ஒரு…

தொழுகையின் முக்கியத்துவம்

தலாக் சொல்லப்பட்ட பெண்கள் தொடர்பாக பேசப்பட்டு வரும் இந்தச் சூழலில் அடுத்து வரும் சில வசனங்கள் கணவனை இழந்த விதவைப் பெண்களின் காத்திருப்பு காலம் குறித்தும் அவர்களின் மறுமணம் குறித்தும் அது தொடர்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய இங்கிதங்கள் குறித்தும் பேசுகின்றன. அவை…

தலாக்கும் அநியாயமும்

அடுத்து வரும் வசனங்கள் தலாக் சொல்லப்பட்ட பெண்கள் மீது இழைக்கப்படும் இரண்டு வகையான அநீதியைக் குறித்துப் பேசுகின்றன. உண்மையில் அது ஆண்கள் தங்களுக்கு எதிராகவே செய்து கொள்ளும் அநீதி. அல்லாஹ் வழங்கிய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துபவர்கள் நிச்சயம் அதற்கான விளைவை அனுபவிப்பார்கள்.…

தலாக் தொடர்பான சட்டங்கள்

மனைவியுடன் உறவுகொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்து விலகியிருப்பது தலாக்கின் ஒரு வடிவமாகவே கருதப்படுகிறது. இந்தச் சூழலில் அடுத்தடுத்த வசனங்கள் தலாக் தொடர்பான சட்டங்களைப் பேசுகின்றன.  وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ وَلَا يَحِلُّ لَهُنَّ أَنْ يَكْتُمْنَ مَا…