திருக்குர்ஆன் தெளிவுரை

அல்லாஹ் காட்டிய வழியே நேரான வழி

وَقَالَ الَّذِينَ لَا يَعْلَمُونَ لَوْلَا يُكَلِّمُنَا اللهُ أَوْ تَأْتِينَا آيَةٌ كَذَلِكَ قَالَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ مِثْلَ قَوْلِهِمْ تَشَابَهَتْ قُلُوبُهُمْ قَدْ بَيَّنَّا الْآيَاتِ لِقَوْمٍ يُوقِنُونَ إِنَّا أَرْسَلْنَاكَ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَلَا تُسْأَلُ عَنْ أَصْحَابِ الْجَحِيمِ وَلَنْ

இப்ராஹீமின் பிரார்த்தனை

யூதர்கள், கிருஸ்தவர்கள், இணைவைப்பாளர்கள் ஆகிய மூவரும் ஒன்றிணையும் புள்ளி இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள்தாம். இப்ராஹீமின் மகனான இஸ்மாயிலிடமிருந்து அறபுக்கள் உருவாகிறார்கள். அவரது இன்னொரு மகனான இஸ்ஹாக்கிடமிருந்து யூதர்கள் உருவாகிறார்கள். யூதர்கள் தங்களை இப்ராஹீமின் வாரிசு என்றும் அதனடிப்படையில் தூதுத்துவம் தங்கள் சமூகத்தாருக்கு மட்டுமே உரியது என்றும் சொல்லிக்

குறுங்குழு வாதங்களற்ற சமூகம்

وَمَنْ يَرْغَبُ عَنْ مِلَّةِ إِبْرَاهِيمَ إِلَّا مَنْ سَفِهَ نَفْسَهُ وَلَقَدِ اصْطَفَيْنَاهُ فِي الدُّنْيَا وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ إِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ وَوَصَّى بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَابَنِيَّ إِنَّ اللهَ

கிப்லா மாற்றமும் பெரும் பொறுப்பும்

சாட்சியம் கூற மறுக்கும், தாங்கள் அறிந்தவற்றுக்கு எதிராகப் பேசிக் கொண்டிருக்கும் யூதர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்படுவதோடு முதல் பாகம் நிறைவடைகிறது. அடுத்து வரும் வசனங்கள் மனிதர்களுக்கு வழிகாட்டும் தலைமைத்துவ பொறுப்பிலிருந்து அவர்கள் நீக்கப்பட்டு அந்த பொறுப்பு முஸ்லிம்களின் வசம் ஒப்படைக்கப்படுவதையும் அந்த பொறுப்பை சுமப்பதற்கு அவர்கள் பெற்றிருக்க வேண்டிய

மகத்தான அருட்கொடை

உண்மையை அறிந்து கொண்டே அவர்கள் நிராகரிக்கிறார்கள் என்றால் அவர்களை விட்டு விடுங்கள். அவர்கள் அப்படித்தான். அவர்களுடன் தர்க்கம் செய்யாதீர்கள். அவர்களுக்காக நீங்கள் கவலைப்படாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு பாதை இருக்கிறது. அதில்தான் அவர்கள் செல்வார்கள். நீங்கள் செய்ய வேண்டியது நற்செயல்களில் போட்டி போட்டுக் கொண்டு உங்களை ஈடுபடுத்துவதுதான். இதுதான் சரியான

இழப்புகளை, சிரமங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

முஸ்லிம் சமூகத்திற்கு மனித சமூகத்தை வழிநடத்தும் பெரும் பொறுப்பு கொடுக்கப்பட்ட பிறகு அது அந்தப் பொறுப்பை நிறைவேற்றும் பாதையில் வரக்கூடிய சவால்களை, சிரமங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது கற்றுக் கொடுக்கப்படுகிறது. கிப்லா மாற்றத்திற்குப் பிறகுதான் பத்ருப்போர் நிகழ்ந்தது. பத்ருப்போர் நிகழும் என்று தெரிந்துதான் அதற்கு முன்னரே அதனால்

எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது?

‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்ந்தது? மற்றவர்கள் எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறார்கள்?’ ‘நான் இப்படி செய்திருக்கக்கூடாது’ ‘என்னைவிட திறமைக்குறைவானவன் எல்லாம் முன்னேறிக் கொண்டே செல்கிறானே!’ ‘நானெல்லாம் எப்படி இருக்க வேண்டிய ஆள்’ இதுபோன்ற புலம்பல் வார்த்தைகளால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது? மீண்டும் மீண்டும் அந்த கசப்புணர்வில் மூழ்கிக் கொண்டே

இரு வகை மனிதர்கள்

இஸ்லாம் சொல்லும் வழிபாடுகளின் நோக்கம் தக்வாதான். வழிபாடுகள் மனிதனின் உள்ளத்தை தூய்மைப்படுத்த வேண்டும். அவனுடைய தீய இச்சைகளின் பிடியிலிருந்து அவனை விடுவிக்க வேண்டும். ஆனால் உலகியல்வாதிகளின் வழிபாடுகள் வெறும் சடங்குகளாகத்தான் இருக்கும். அவை அவர்களின் உள்ளங்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அவர்கள் தீய இச்சைகளுக்கு அடிமையானவர்கள். அவற்றை நிறைவேற்றுவதையே

ஹஜ் தொடர்பான சட்டங்கள்

நோன்பு, புனித மாதங்கள், போர், புனித மாதங்களில் போர், அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தல் ஆகிய விவகாரங்களுக்குப் பிறகு இப்போது ஹஜ் தொடர்பான விவகாரம் இடம்பெறுகிறது. ஏற்கனவே புனித மாதங்கள் தொடர்பான விவகாரத்தில் ஹஜ்ஜைக் குறித்த குறிப்பும் இடம்பெற்றிருந்தது. இந்த வசனங்கள் முந்தைய வசனங்களோடு நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கின்றன.

மறுமை நாள் நெருங்கி விட்டதா?

“இப்போது நடக்கும் நிகழ்வுகளை, குழப்பங்களை வைத்துப் பார்க்கும்போது மறுமை நாள் நெருங்கி விட்டது என்றே தெரிகிறது. குழப்பங்கள், முன்னறிவிப்புகள் தொடர்பான அறிவிப்புகளும் இதையே உண்மைப்படுத்துகின்றன.” இந்த வாசகம் இப்போது சொல்லப்படுவது மட்டுமல்ல. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம்வரை தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழும் நிகழ்வுகளோடு,

போர் தொடர்பான கட்டளை

وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوا بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوا فَرِيقًا مِنْ أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنْتُمْ تَعْلَمُونَ 2:188. “உங்களுக்கு மத்தியில் ஒருவர் மற்றவரின் செல்வங்களை தவறான முறையில் உண்ணாதீர்கள். மக்களின் செல்வங்களில் ஒரு பகுதியை பாவமான முறையில் உண்பதற்காக அறிந்துகொண்டே அதிகாரிகளை

நோன்பு தொடர்பான சில சந்தேகங்கள்

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ    2:186. “என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “நான் மிக அருகில் இருக்கின்றேன்; அழைப்பவரின் அழைப்புக்கு பதிலளிக்கின்றேன், அவர் என்னை அழைக்கும்போது.

நோன்பும் திருக்குர்ஆனும்

அடுத்து இடம்பெறும் கட்டளை ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது தொடர்பானதாகும். அந்த மாதத்தில்தான் திருக்குர்ஆன் அருளப்படத் தொடங்கியது என்பதனால் அந்த மகத்தான அருட்கொடைக்கு நன்றி செலுத்தும்பொருட்டு அந்த மாதத்தில் நோன்பு நோற்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். இந்தக் கட்டளைக்குப் பின்னால் இருக்கும் நோக்கமும் தக்வாதான். தக்வாதான் குர்ஆனைப் புரிந்து கொள்வதற்கான

உயிருக்கும் செல்வத்திற்குமான பாதுகாப்பு

அடுத்து வரும் கட்டளைகள் தனி மனித வாழ்விலும் சமூகத்திலும் தக்வாவை நிலைநிறுத்தக்கூடியவை. தக்வாவின்மூலமே மனிதர்கள் அல்லாஹ்வின் வேதனையிலிருந்தும் தங்களுக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சனைகளால் உருவாகும் சிக்கல்களிலிருந்தும் தப்பிக்க முடியும். ஒரு சமூகம் சிறந்த சமூகமாக இருக்க வேண்டும் எனில் அந்த சமூகத்தினருக்கு மத்தியில் அல்லாஹ்வின் மார்க்கம் முன்வைக்கும் ஒழுங்குகள்

மனச்சிக்கல் தொடர்பான ஒரு கேள்வி

நீங்கள் எழுப்பிய இந்தக் கேள்வி மிக முக்கியமானது. பல முறை எனக்கு நானே இந்தக் கேள்வியை கேட்டிருக்கிறேன். அணுக்கமான நண்பர்களிடமும் இது குறித்து விவாதித்திருக்கிறேன். நாம் அவர்களோடு கரிசனத்தோடு நடந்துகொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் அதனை தங்களுக்கு சாதகமாக ஆக்கிவிடக்கூடாது. தாங்கள் செய்யும் எல்லா தவறுகளையும் தங்களின் மனச்சிக்கல்

மார்க்கம் என்பது

யூதர்களும் கிருஸ்தவர்களும் வெறும் சடங்குகளை, வீணான தர்க்கங்களை மார்க்கம் என்று புரிந்து வைத்திருக்கிறார்கள். அதுவல்ல மார்க்கம். அடுத்து வரக்கூடிய வசனம் மார்க்கத்தின் அசலான ஆன்மாவைத் தெளிவுபடுத்துகிறது. குறைவான வார்த்தைகளில் மார்க்கத்தின் அசலான தன்மைகள் அனைத்தும் தெளிவுபடுத்தப்படுகின்றன.    لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ