திருக்குர்ஆன் தெளிவுரை

முதல் மனிதரின் சம்பவம்

பூமியிலுள்ள அனைத்தும் மனிதர்களுக்காகவே படைக்கப்பட்டுள்ளன என்ற கண்ணோட்டம் தெளிவுபடுத்தப்பட்ட பிறகு மனிதப் படைப்பின் ஆரம்பம் குறித்த விசயம் இடம்பெறுகிறது. மனிதனைப் படைப்பதற்கு முன்னால் அல்லாஹ் வானவர்களுடன் நிகழ்த்திய உரையாடல் குறித்தும் படைத்த பிறகு நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்தும் தெளிவுபடுத்தப்படுகிறது. அடுத்து வரக்கூடிய ஒன்பது வசனங்களில் மனித வாழ்வின் ஆதாரமான

இஸ்ரவேல் சமூகத்தினர்

இதுவரையிலான வசனங்களில் யூதர்கள் மறைமுகமாக சுட்டப்பட்டிருந்தார்கள்.  அடுத்து வரக்கூடிய வசனங்கள் நேரடியாக யூதர்களை விளித்துப் பேசுகின்றன. அல்லாஹ் அவர்கள் மீது பொழிந்த அருட்கொடைகளும் அவற்றை அவர்கள் எதிர்கொண்ட விதமும் நினைவூட்டப்படுகின்றன. இந்த வசனங்கள் அவர்களுக்கான நேரடியான அழைப்பையும் அவர்களைப் போன்ற இயல்புடையவர்களுக்கான மறைமுகமான அழைப்பையும் உள்ளடக்கி இருக்கின்றன. அவர்களைப்

சிறப்புகளும் பொறுப்புகளும்

மீண்டும் அல்லாஹ் யூதர்களை ‘இஸ்ராயீலின் மக்களே’ என்று அழைத்து அவர்கள் மீது தான் பொழிந்த அருட்கொடையை, உலக மக்கள் அனைவரையும்விட அவர்களை சிறப்பித்ததை நினைத்துப் பார்க்குமாறு கூறுகிறான். பிறகு பல்வேறு காலகட்டங்களில் அவன் அவர்கள் மீது பொழிந்த அருட்கொடைகளையும் அவற்றை அவர்கள் எதிர்கொண்ட விதத்தையும் அவன் நினைவூட்டுகிறான். மற்ற

நன்றிகெட்டத்தனம்

“அவர்கள் நமக்கு அநீதி இழைக்கவில்லை. மாறாக அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டார்கள்” இது இங்கு செயல்படக்கூடிய பொதுவான நியதி. அல்லாஹ் யார் மீதும் அநீதி இழைப்பதில்லை. அவர்களுக்கு எது நன்மையோ அதைத்தான் அவன் செய்யும்படி கட்டளையிட்டுள்ளான். அவர்களுக்கு எது தீங்கிழைக்குமோ அதைவிட்டுத்தான் விலகி இருக்கும்படி அவன்

இறுகிய உள்ளங்கள்

இதற்குப் பிறகு வரக்கூடிய வசனங்கள் யூதர்கள் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதிக்கு மாறாகச் செயல்பட்டதையும் அவர்கள் செய்த வரம்புமீறல்களையும் பட்டியலிட்டுக் கொண்டு செல்கின்றன.   وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ ثُمَّ تَوَلَّيْتُمْ مِنْ

திரிபுவாதிகள்

யூதர்களின் வரம்புமீறல்கள், அவர்களின் கோணலான இயல்பு, தங்கள் தூதருடன் அவர்கள் நடந்துகொண்ட விதம், அற்புதங்களை, சான்றுகளைக் கண்டு உருகாத அவர்களின் இறுகிய உள்ளங்கள் ஆகியவற்றை தெளிவுபடுத்திய பிறகு திருக்குர்ஆன் சட்டென முஸ்லிம்களை நோக்கி உரையாடுகிறது. இப்படிப்பட்ட பண்புகள் கொண்டவர்கள் நீங்கள் சொல்வதைக் கேட்டு உடனே நம்பிக்கை கொள்வார்கள் என்று

மூன்று உதாரணங்கள்

யார் நேர்வழியை விரும்புகிறார்களோ அவர்கள் நிச்சயம் நேர்வழியை அடைவார்கள். நேர்வழியை விரும்பக்கூடியவர்களை அல்லாஹ் ஒருபோதும் கைவிட்டு விடுவதில்லை. நேர்வழியை விரும்பக்கூடியவர்களுக்குத்தான் அந்தப் பாதை தெளிவாகிக் கொண்டே செல்லும். அவர்கள் எல்லாவிதமான இருள்களிலிருந்தும் பாதுகாக்கப்படுவார்கள். நேர்வழியை விரும்பாதவர்கள் அதனைவிட்டு தூரமாகிக் கொண்டே செல்வார்கள். ஷைத்தான்கள் அவர்களின் தோழர்களாக மாறிவிடுவார்கள். அந்த

ஆயத்துல் குர்ஸீ

மனிதர்கள் ஏன் அலட்சியமாக இருக்கிறார்கள்? அல்லாஹ்வைப் பற்றிய பிழையான கண்ணோட்டத்திலிருந்தே அவர்களின் அலட்சியம் உருவாகிறது. அவர்கள் அல்லாஹ்வை மனிதர்களைப் போன்ற பண்புகளைக் கொண்ட போலியான கடவுள்களைப் போன்றவன்தான் என்று எண்ணிக் கொள்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வைக் குறித்து சரியான முறையில் அறிந்து கொண்டால் அவனுடைய கட்டளைகளை தங்களின் வாழ்க்கையில் செயல்படுத்த

செலவு செய்யுங்கள்

தூதர்கள் அவனுடைய தூதை சுமந்து வந்தவர்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான தனித்தன்மையைக் கொண்டவர்கள். அந்த தனித்தன்மைகள் அவர்கள் நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்கேற்ப, அவர்களின் காலகட்டத்திற்கேற்ப அவர்களுக்கு வழங்கப்பட்டவையாகும். அவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு மத்தியில் பாகுபாடு காட்டப்படக்கூடாது. அவர்கள் கொண்டு வந்த மார்க்கம் ஒன்றுதான். அவர்களுக்கு மத்தியில் பாகுபாடு

யூதர்களின் வாழ்க்கையிலிருந்து இரண்டு சம்பவங்கள்

திருமணம், தலாக் போன்ற குடும்பவியல் விவகாரங்கள் தெளிவுபடுத்தப்பட்ட பிறகு அத்தியாயம் மீண்டும் சமூகவியல் விவகாரங்களை நோக்கித் திரும்புகிறது. இந்த விவகாரங்கள் பேசப்படுவதற்கு முன்னர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுதல், அவன் பாதையில் செலவு செய்தல் தொடர்பாகத்தான் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. இடையில் அவசியமான ஒரு விசயத்தை தெளிவுபடுத்த நேரிட்டால் அது தொடர்பான

இயக்கத்தைக் கட்டமைத்தல் – 3

இஸ்லாமிய அழைப்பியலின் பாதை எளிதானது அல்ல. மனிதர்கள் நினைத்த மாத்திரத்தில் அந்தப் பாதையில் சென்றுவிட முடியாது. மனக்கட்டுப்பாடு அற்றவர்கள் அந்தப் பாதையில் நீடிக்க முடியாது. உண்மையில் அது அல்லாஹ் அளிக்கும் பெரும் பாக்கியம். அந்த பாக்கியத்தைப் பெறுவதற்கு முன்னர் அவர்கள் சோதனைகளைக் கடக்க வேண்டும். சோதனைகளை வெற்றிகரமாக கடந்தவர்கள்

இயக்கத்தைக் கட்டமைத்தல் – 2

இஸ்லாமிய அழைப்பியல் என்பது ஒரு மறைமுக அதிகாரமும்கூட. மக்கள் அழைப்பாளர்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். அவர்களை நம்புகிறார்கள். அவர்களிடம் இஸ்லாம் என்ற அளவுகோல் இருக்கிறது. அதன்படி அவர்கள் நடப்பார்கள் என்று அவர்கள் கருதுவதால் அவர்களை நம்புகிறார்கள். சிலர் அவர்களின் பணிக்கு நிதியுதவி செய்கிறார்கள். சிலர் அவர்களுக்குச் சேவகம் செய்கிறார்கள். சிலர்

நன்றியும் நன்றிகெட்டத்தனமும்

உங்களிடம் நன்றி செலுத்தும் பண்பு இருக்கிறது எனில் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.  உங்களிடம் இருப்பவை பாதுகாக்கப்படும். எதிர்பாரா புறத்திலிருந்து நீங்கள் உதவி செய்யப்படுவீர்கள். நான் கூறுவது படைத்த இறைவன் உங்களுக்கு அளித்த அருட்கொடையை உணர்ந்து நன்றி செலுத்தும் பண்பு. அதுதான் முதன்மையானது. மற்றவை அதற்குப் பின்னால்

தொழுகையின் முக்கியத்துவம்

தலாக் சொல்லப்பட்ட பெண்கள் தொடர்பாக பேசப்பட்டு வரும் இந்தச் சூழலில் அடுத்து வரும் சில வசனங்கள் கணவனை இழந்த விதவைப் பெண்களின் காத்திருப்பு காலம் குறித்தும் அவர்களின் மறுமணம் குறித்தும் அது தொடர்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய இங்கிதங்கள் குறித்தும் பேசுகின்றன. அவை குறித்து பேசப்படுவதற்கு உகந்த சூழல் இதுதான்.

இயக்கத்தை கட்டமைத்தல் – 1

ஒருவர் மற்றவருடன் எப்படி இணைகிறார்கள்? ஒருவர் மற்றவரைவிட்டு எப்படி விலகிச் செல்கிறார்கள்? அன்பு ஈர்க்கும். வெறுப்பு விலக்கி வைக்கும். தேவை ஈர்க்கும். தேவையின்மை விலக்கி வைக்கும். ஒத்திசைவு ஈர்க்கும். ஒத்திசைவின்மை விலக்கி வைக்கும். நிர்ப்பந்தமும் சூழலும்கூட இணைப்பையும் விலகலையும் ஏற்படுத்தும். ஆனால் அவை வலுவான, நீடிக்கக்கூடிய காரணிகள் அல்ல.

மிக இலகுவாக

எந்தவொரு பெரும் செயலும் மிக இலகுவாக நிகழ்ந்து விடுகிறது. ஆனால் அது நிகழ்ந்த பிறகுதான் அது இலகுவாக நிகழ்ந்திருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அது நிகழ்வதற்கு முன்னர்வரை அது கடினமான அல்லது நிகழ்வதற்கு சாத்தியமற்ற ஒன்றாகத்தான் நமக்குத் தெரிந்து கொண்டிருக்கும். ஒவ்வொரும் அவர்கள் நிறைவேற்ற வேண்டிய