திருக்குர்ஆன் தெளிவுரை

யூதர்களிடம் பெறப்பட்ட உறுதிமொழிகள்

யூதர்களுக்கு நபியவர்களின் தூதுத்துவத்தை நம்பி இஸ்லாத்தை ஏற்பதற்கு தடையாக இருந்தது அவர்களின் உயர்வு மனப்பான்மைதான். தங்களின் இனம் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டது என்றும் தங்கள் இனத்தில் அவனுடைய தூதர்கள் அதிக அளவில் வந்திருக்கிறார்கள் என்றும் தங்களுக்கு வெளியிலிருந்து வேறு ஒரு தூதுத்துவமோ தூதரோ தேவையில்லை என்றும் அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

பிடிவாதமும் பொறாமையும்

 وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَقَفَّيْنَا مِنْ بَعْدِهِ بِالرُّسُلِ وَآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ أَفَكُلَّمَا جَاءَكُمْ رَسُولٌ بِمَا لَا تَهْوَى أَنْفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ فَفَرِيقًا كَذَّبْتُمْ وَفَرِيقًا تَقْتُلُونَ وَقَالُوا قُلُوبُنَا غُلْفٌ بَلْ لَعَنَهُمُ اللهُ بِكُفْرِهِمْ

விசித்திரமான வாதங்கள்

நபியவர்களை, இந்தக் குர்ஆனை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு யூதர்கள் பல்வேறு சாக்குப்போக்குகளை, விசித்திரமான வாதங்களை முன்வைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சமயம், நாங்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், சுவனம் எங்களுக்கு மட்டுமே உரியது என்றார்கள். இதன்மூலம் உங்களை நாங்கள் பின்பற்றத் தேவையில்லை என்பதையே மறைமுகமாகச் சுட்டினார்கள். இன்னொரு சமயம், முஹம்மது நபிக்கு ஜிப்ரீல்தான்

யூதர்களும் சூனியமும்

وَلَمَّا جَاءَهُمْ رَسُولٌ مِنْ عِنْدِ اللهِ مُصَدِّقٌ لِمَا مَعَهُمْ نَبَذَ فَرِيقٌ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ كِتَابَ اللهِ وَرَاءَ ظُهُورِهِمْ كَأَنَّهُمْ لَا يَعْلَمُونَ وَاتَّبَعُوا مَا تَتْلُوا الشَّيَاطِينُ عَلَى مُلْكِ سُلَيْمَانَ وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيْاطِينَ كَفَرُوا

மன அரிப்புகள்

தொடர்ந்து வரக்கூடிய வசனங்கள் யூதர்களின் தீய நோக்கங்களை, வழிகேடுகளை, அவர்கள் முஸ்லிம்களின் மீது கொண்டிருக்கும் பொறாமையை அம்பலப்படுத்துகின்றன. அவை அவர்கள் எழுப்பும் ஆட்சேபனைகளும் ஏற்படுத்தும் குழப்பங்களும் முஸ்லிம்களை அவர்களின் மார்க்கத்திலிருந்து திருப்பி அவர்களை தங்களைப் போன்ற நிராகரிப்பாளர்களாக ஆக்குவதற்கு அவர்கள் செய்யும் சூழ்ச்சிகள்தாம் என்பதையும் முஸ்லிம்களும் அவர்களைப் போன்று

வெறுப்பில் ஒன்றிணைந்தவர்கள்

وَقَالُوا لَنْ يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا مَنْ كَانَ هُودًا أَوْ نَصَارَى تِلْكَ أَمَانِيُّهُمْ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ بَلَى مَنْ أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهُ أَجْرُهُ عِنْدَ رَبِّهِ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

மூன்று உதாரணங்கள்

யார் நேர்வழியை விரும்புகிறார்களோ அவர்கள் நிச்சயம் நேர்வழியை அடைவார்கள். நேர்வழியை விரும்பக்கூடியவர்களை அல்லாஹ் ஒருபோதும் கைவிட்டு விடுவதில்லை. நேர்வழியை விரும்பக்கூடியவர்களுக்குத்தான் அந்தப் பாதை தெளிவாகிக் கொண்டே செல்லும். அவர்கள் எல்லாவிதமான இருள்களிலிருந்தும் பாதுகாக்கப்படுவார்கள். நேர்வழியை விரும்பாதவர்கள் அதனைவிட்டு தூரமாகிக் கொண்டே செல்வார்கள். ஷைத்தான்கள் அவர்களின் தோழர்களாக மாறிவிடுவார்கள். அந்த

ஆயத்துல் குர்ஸீ

மனிதர்கள் ஏன் அலட்சியமாக இருக்கிறார்கள்? அல்லாஹ்வைப் பற்றிய பிழையான கண்ணோட்டத்திலிருந்தே அவர்களின் அலட்சியம் உருவாகிறது. அவர்கள் அல்லாஹ்வை மனிதர்களைப் போன்ற பண்புகளைக் கொண்ட போலியான கடவுள்களைப் போன்றவன்தான் என்று எண்ணிக் கொள்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வைக் குறித்து சரியான முறையில் அறிந்து கொண்டால் அவனுடைய கட்டளைகளை தங்களின் வாழ்க்கையில் செயல்படுத்த

செலவு செய்யுங்கள்

தூதர்கள் அவனுடைய தூதை சுமந்து வந்தவர்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான தனித்தன்மையைக் கொண்டவர்கள். அந்த தனித்தன்மைகள் அவர்கள் நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்கேற்ப, அவர்களின் காலகட்டத்திற்கேற்ப அவர்களுக்கு வழங்கப்பட்டவையாகும். அவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு மத்தியில் பாகுபாடு காட்டப்படக்கூடாது. அவர்கள் கொண்டு வந்த மார்க்கம் ஒன்றுதான். அவர்களுக்கு மத்தியில் பாகுபாடு

யூதர்களின் வாழ்க்கையிலிருந்து இரண்டு சம்பவங்கள்

திருமணம், தலாக் போன்ற குடும்பவியல் விவகாரங்கள் தெளிவுபடுத்தப்பட்ட பிறகு அத்தியாயம் மீண்டும் சமூகவியல் விவகாரங்களை நோக்கித் திரும்புகிறது. இந்த விவகாரங்கள் பேசப்படுவதற்கு முன்னர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுதல், அவன் பாதையில் செலவு செய்தல் தொடர்பாகத்தான் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. இடையில் அவசியமான ஒரு விசயத்தை தெளிவுபடுத்த நேரிட்டால் அது தொடர்பான

இயக்கத்தைக் கட்டமைத்தல் – 3

இஸ்லாமிய அழைப்பியலின் பாதை எளிதானது அல்ல. மனிதர்கள் நினைத்த மாத்திரத்தில் அந்தப் பாதையில் சென்றுவிட முடியாது. மனக்கட்டுப்பாடு அற்றவர்கள் அந்தப் பாதையில் நீடிக்க முடியாது. உண்மையில் அது அல்லாஹ் அளிக்கும் பெரும் பாக்கியம். அந்த பாக்கியத்தைப் பெறுவதற்கு முன்னர் அவர்கள் சோதனைகளைக் கடக்க வேண்டும். சோதனைகளை வெற்றிகரமாக கடந்தவர்கள்

இயக்கத்தைக் கட்டமைத்தல் – 2

இஸ்லாமிய அழைப்பியல் என்பது ஒரு மறைமுக அதிகாரமும்கூட. மக்கள் அழைப்பாளர்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். அவர்களை நம்புகிறார்கள். அவர்களிடம் இஸ்லாம் என்ற அளவுகோல் இருக்கிறது. அதன்படி அவர்கள் நடப்பார்கள் என்று அவர்கள் கருதுவதால் அவர்களை நம்புகிறார்கள். சிலர் அவர்களின் பணிக்கு நிதியுதவி செய்கிறார்கள். சிலர் அவர்களுக்குச் சேவகம் செய்கிறார்கள். சிலர்

நன்றியும் நன்றிகெட்டத்தனமும்

உங்களிடம் நன்றி செலுத்தும் பண்பு இருக்கிறது எனில் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.  உங்களிடம் இருப்பவை பாதுகாக்கப்படும். எதிர்பாரா புறத்திலிருந்து நீங்கள் உதவி செய்யப்படுவீர்கள். நான் கூறுவது படைத்த இறைவன் உங்களுக்கு அளித்த அருட்கொடையை உணர்ந்து நன்றி செலுத்தும் பண்பு. அதுதான் முதன்மையானது. மற்றவை அதற்குப் பின்னால்

தொழுகையின் முக்கியத்துவம்

தலாக் சொல்லப்பட்ட பெண்கள் தொடர்பாக பேசப்பட்டு வரும் இந்தச் சூழலில் அடுத்து வரும் சில வசனங்கள் கணவனை இழந்த விதவைப் பெண்களின் காத்திருப்பு காலம் குறித்தும் அவர்களின் மறுமணம் குறித்தும் அது தொடர்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய இங்கிதங்கள் குறித்தும் பேசுகின்றன. அவை குறித்து பேசப்படுவதற்கு உகந்த சூழல் இதுதான்.

இயக்கத்தை கட்டமைத்தல் – 1

ஒருவர் மற்றவருடன் எப்படி இணைகிறார்கள்? ஒருவர் மற்றவரைவிட்டு எப்படி விலகிச் செல்கிறார்கள்? அன்பு ஈர்க்கும். வெறுப்பு விலக்கி வைக்கும். தேவை ஈர்க்கும். தேவையின்மை விலக்கி வைக்கும். ஒத்திசைவு ஈர்க்கும். ஒத்திசைவின்மை விலக்கி வைக்கும். நிர்ப்பந்தமும் சூழலும்கூட இணைப்பையும் விலகலையும் ஏற்படுத்தும். ஆனால் அவை வலுவான, நீடிக்கக்கூடிய காரணிகள் அல்ல.

மிக இலகுவாக

எந்தவொரு பெரும் செயலும் மிக இலகுவாக நிகழ்ந்து விடுகிறது. ஆனால் அது நிகழ்ந்த பிறகுதான் அது இலகுவாக நிகழ்ந்திருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அது நிகழ்வதற்கு முன்னர்வரை அது கடினமான அல்லது நிகழ்வதற்கு சாத்தியமற்ற ஒன்றாகத்தான் நமக்குத் தெரிந்து கொண்டிருக்கும். ஒவ்வொரும் அவர்கள் நிறைவேற்ற வேண்டிய