திருக்குர்ஆன் தெளிவுரை

ஷைத்தானின் அச்சுறுத்தலும் அல்லாஹ்வின் வாக்குறுதியும்

கடந்த வசனங்களில் தர்மம் செய்வதன் ஒழுங்குமுறைகளும் அவை பின்பற்றப்படவில்லையெனில் ஏற்படும் விளைவுகளும் தெளிவுபடுத்தப்பட்ட பிறகு அடுத்த வரும் வசனங்களில் தர்மம் செய்யப்படும் பொருள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் இன்னும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில ஒழுங்குகள் குறித்தும் தெளிவுடுத்தப்படுகின்றன. يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنْفِقُوا مِنْ

வட்டித் தொழிலும் தன்னல வெறியும்

தர்மம் செய்வதன் ஒழுங்குகள், நல்ல தர்மம் ஏற்படுத்தும் தாக்கங்கள், மோசமான தர்மம் ஏற்படுத்தும் விளைவுகள் ஆகியவை தெளிவுபடுத்தப்பட்ட பிறகு அதற்கு முற்றிலும் மாறான வட்டியைக் குறித்து பேசப்படுகிறது. முஸ்லிகள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் சமூகத்தினர். அவர்கள் மற்றவர்களின் துன்பங்களைக் கொண்டு பயனடையக்கூடியவர்கள் அல்ல. அந்த துன்பங்களிலிருந்து அவர்களை விடுவிக்க தங்களால்

அல்பகரா நிறைவுப் பகுதி

திருக்குர்ஆனின் மிக நீண்ட அத்தியாயம் தன் இறுதிப் பகுதியை அடைந்திருக்கிறது. அடுத்து வரக்கூடிய இறுதியான வசனங்கள் அதன் முடிவுரைபோலவே இருக்கின்றன. அவை முந்தைய வசனங்களோடும் ஒட்டுமொத்த அத்தியாயத்தோடும் ஒருசேர தொடர்பு கொண்டிருக்கின்றன.    لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأرْضِ وَإِنْ تُبْدُوا مَا فِي

ஆலுஇம்ரான் (இம்ரானின் குடும்பத்தினர்)

அல்பகரா அத்தியாயத்தை தொடர்ந்து இடம்பெறும் இந்த அத்தியாயம் அதன் இன்னொரு பகுதி போன்று அதனை முழுமைப்படுத்தக்கூடியதாகவும் அதில் சுருக்கமாக இடம்பெற்றுள்ள சில விசயங்களை இன்னும் கூடுதலாக தெளிவுபடுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது. இந்த இரு அத்தியாயங்களும் ஒரு மரத்திலிருந்து வெளிப்பட்ட இரு கிளைகள்போன்று இருக்கின்றன. இரண்டும் முஹம்மது நபியவர்களின் தூதுத்துவத்தை சந்தேகத்திற்கு

இவ்வுலக இன்பங்களின் இயல்பு என்ன?

அறிவுமுதிர்ச்சி கொண்டவர்கள் தங்களின் பலத்தையும் பலவீனத்தையும் அறிகிறார்கள். தங்களின் பலவீனம் தங்களை தடுமாறச் செய்துவிடக்கூடாது என்ற விழிப்புணர்வின் வெளிப்பாடே அவர்களிடமிருந்து வெளிப்பட்ட மேற்கண்ட பிரார்த்தனை. மனம் இச்சைகளுக்கு அடிமையாகி விடும்போது பலவீனமடைந்து விடுகிறது. நிராகரிப்பு பலவீனமடைந்த மனதின் வெளிப்பாடேயாகும். அற்ப ஆதாயங்களுக்காக அவர்கள் சத்தியத்தை கைவிட துணிகிறார்கள். அவர்கள்

மறுமை நாள் நெருங்கி விட்டதா?

“இப்போது நடக்கும் நிகழ்வுகளை, குழப்பங்களை வைத்துப் பார்க்கும்போது மறுமை நாள் நெருங்கி விட்டது என்றே தெரிகிறது. குழப்பங்கள், முன்னறிவிப்புகள் தொடர்பான அறிவிப்புகளும் இதையே உண்மைப்படுத்துகின்றன.” இந்த வாசகம் இப்போது சொல்லப்படுவது மட்டுமல்ல. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம்வரை தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழும் நிகழ்வுகளோடு,

போர் தொடர்பான கட்டளை

وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوا بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوا فَرِيقًا مِنْ أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنْتُمْ تَعْلَمُونَ 2:188. “உங்களுக்கு மத்தியில் ஒருவர் மற்றவரின் செல்வங்களை தவறான முறையில் உண்ணாதீர்கள். மக்களின் செல்வங்களில் ஒரு பகுதியை பாவமான முறையில் உண்பதற்காக அறிந்துகொண்டே அதிகாரிகளை

நோன்பு தொடர்பான சில சந்தேகங்கள்

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ    2:186. “என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “நான் மிக அருகில் இருக்கின்றேன்; அழைப்பவரின் அழைப்புக்கு பதிலளிக்கின்றேன், அவர் என்னை அழைக்கும்போது.

நோன்பும் திருக்குர்ஆனும்

அடுத்து இடம்பெறும் கட்டளை ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது தொடர்பானதாகும். அந்த மாதத்தில்தான் திருக்குர்ஆன் அருளப்படத் தொடங்கியது என்பதனால் அந்த மகத்தான அருட்கொடைக்கு நன்றி செலுத்தும்பொருட்டு அந்த மாதத்தில் நோன்பு நோற்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். இந்தக் கட்டளைக்குப் பின்னால் இருக்கும் நோக்கமும் தக்வாதான். தக்வாதான் குர்ஆனைப் புரிந்து கொள்வதற்கான

உயிருக்கும் செல்வத்திற்குமான பாதுகாப்பு

அடுத்து வரும் கட்டளைகள் தனி மனித வாழ்விலும் சமூகத்திலும் தக்வாவை நிலைநிறுத்தக்கூடியவை. தக்வாவின்மூலமே மனிதர்கள் அல்லாஹ்வின் வேதனையிலிருந்தும் தங்களுக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சனைகளால் உருவாகும் சிக்கல்களிலிருந்தும் தப்பிக்க முடியும். ஒரு சமூகம் சிறந்த சமூகமாக இருக்க வேண்டும் எனில் அந்த சமூகத்தினருக்கு மத்தியில் அல்லாஹ்வின் மார்க்கம் முன்வைக்கும் ஒழுங்குகள்

மனச்சிக்கல் தொடர்பான ஒரு கேள்வி

நீங்கள் எழுப்பிய இந்தக் கேள்வி மிக முக்கியமானது. பல முறை எனக்கு நானே இந்தக் கேள்வியை கேட்டிருக்கிறேன். அணுக்கமான நண்பர்களிடமும் இது குறித்து விவாதித்திருக்கிறேன். நாம் அவர்களோடு கரிசனத்தோடு நடந்துகொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் அதனை தங்களுக்கு சாதகமாக ஆக்கிவிடக்கூடாது. தாங்கள் செய்யும் எல்லா தவறுகளையும் தங்களின் மனச்சிக்கல்

மார்க்கம் என்பது

யூதர்களும் கிருஸ்தவர்களும் வெறும் சடங்குகளை, வீணான தர்க்கங்களை மார்க்கம் என்று புரிந்து வைத்திருக்கிறார்கள். அதுவல்ல மார்க்கம். அடுத்து வரக்கூடிய வசனம் மார்க்கத்தின் அசலான ஆன்மாவைத் தெளிவுபடுத்துகிறது. குறைவான வார்த்தைகளில் மார்க்கத்தின் அசலான தன்மைகள் அனைத்தும் தெளிவுபடுத்தப்படுகின்றன.    لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ

உண்மையை மறைப்பவர்கள்

எதையும் சிந்திக்காமல் குருட்டுத்தனமாகப் பின்பற்றும் நிராகரிப்பாளர்கள் இடையன்களால் ஓட்டிச் செல்லப்படும் ஆட்டு மந்தைகளைப் போன்று தங்களின் தலைவர்களால் வழிநடத்திச் செல்லப்படுகிறார்கள். நம்பிக்கையாளர்களே! நீங்கள் அவர்களைப் போன்று இருக்காதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த அருட்கொடைகளின் விசயத்தில் நீங்கள் நன்றியுடன் நடந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்குத் தடைசெய்தவற்றை மட்டுமே தடைசெய்யப்பட்டவையாகக் கருதுங்கள்.

ஊசலாட்டங்கள், சந்தேகங்கள்

ஷைத்தான் மனித மனதில் ஊசலாட்டங்களை, சந்தேகங்களை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறான். மனம் பலமாக இருக்கும்போது அவற்றை எளிதாக அடையாளம் கண்டு புறந்தள்ளி விடுகிறது. மனம் பலவீனமாக இருக்கும் சமயத்தில் அது அவற்றை எளிதாக புறந்தள்ள முடிவதில்லை. அது அவற்றைப் பொருட்படுத்துகிறது. நன்றாக தூங்கி எழுந்த பிறகு காலையில் மனம் பலத்தோடும்

தங்களின் அறிவைப் பயன்படுத்தாதவர்கள்

தெளிவான இந்த சான்றுகளைக் காணாதவர்கள், இந்த சான்றுகளுக்குப் பின்னால் இருக்கும் பேராற்றலும் பெரும் கருணையும் கொண்ட இறைவனை உணராதவர்கள் அவனுக்கு இணையாக மற்றவர்களை ஏற்படுத்துகிறார்கள். அவனை நேசிப்பதுபோன்று மற்றவர்களையும் நேசிக்கிறார்கள். அவனுக்கு மட்டுமே உரிய பண்புகளை மற்றவர்களுக்கும் கொடுக்கிறார்கள். அவர்கள் அவனை விடுத்து மற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். وَمِنَ