திருக்குர்ஆன் தெளிவுரை

அல்ஃபாத்திஹா (ஆரம்பம்)

மக்காவில் அருளப்பட்ட ஏழு வசனங்களைக் கொண்ட இந்த அத்தியாயத்திற்கு ‘அல்ஃபாத்திஹா’ என்று பெயர். அல்ஃபாத்திஹா என்றால் ஆரம்பம் என்று பொருள். திருக்குர்ஆனின் ஆரம்பமாக இந்த அத்தியாயம் இடம்பெற்றிருப்பதால் இதற்கு இந்தப் பெயர் வந்திருக்கலாம். திருக்குர்ஆனுக்கு ஒரு முன்னுரைபோல இந்த அத்தியாயம் அமைந்திருக்கிறது.     இரத்தினச் சுருக்கமான ஏழு வசனங்கள்

குர்ஆன் யாருக்கு வழிகாட்டும்?

அல்பகரா அல்பகரா என்றால் பசுமாடு என்று பொருள். இந்த அத்தியாயத்தில் இஸ்ரவேல் சமூகத்தில் நிகழ்ந்த பசுமாட்டைக் குறித்த ஒரு சம்பவம் இடம்பெறுகிறது.  அந்தச் சம்பவம் அத்தியாயத்தின் மையக்கருத்துகளைத் தெளிவுபடுத்துவதால் அதற்கு இந்தப் பெயர் இடப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இது மதீனாவில் அருளப்பட்ட மிக நீளமான அத்தியாயமாகும். ஹிஜ்ரத்திற்கு

சீல் வைக்கப்படும் உள்ளம்

நம்பிக்கையாளர்களின் பண்புகள் தெளிவுபடுத்தப்பட்ட பிறகு அவர்களுக்கு எதிர் திசையில் இருக்கும் நிராகரிப்பாளர்கள் குறித்து தெளிவுபடுத்தப்படுகிறது. அவர்கள் ஏன் நிராகரிப்பில் பிடிவாதமாக நிலைத்திருக்கிறார்கள்? அவர்களின் விசயத்தில் செயல்படும் இறைநியதி என்ன? அடுத்த இரு வசனங்கள் இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கின்றன.   إِنَّ الَّذِينَ كَفَرُوا سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ

குழப்பம் விளைவிப்பவர்கள்

நிராகரிப்பாளர்களில் இன்னொரு வகையினர் இருக்கிறார்கள். அவர்கள் தங்களை மூர்க்கமான நிராகரிப்பாளர்களாகக் காட்டிக் கொள்ளவும் மாட்டார்கள். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். இரண்டுக்கும் மத்தியிலான ஒரு நிலைப்பாட்டை அவர்கள் கொண்டிருப்பார்கள். அதுதான் புத்திசாலித்தனம் என்றும் அதுதான் இணக்கத்திற்கான வழி என்றும் அவர்கள் கூறுவார்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இடத்திலும் காணப்படுவார்கள்.

முறியடிக்க முடியாத சவால்

இஸ்லாத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்ட நம்பிக்கையாளர்கள், அந்த அழைப்பை ஏற்க மறுத்த மூர்க்கமான நிராகரிப்பாளர்கள், ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் வெளிப்படையாக நிராகரிக்கவும் முடியாமல் தடுமாற்றமான நிலையில் இருந்த நிராகரிப்பாளர்கள் என மூன்று தரப்பினரையும் அடையாளப்படுத்திய பிறகு அவர்களும் ஏனைய இணைவைப்பாளர்கள் அனைவரும் அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதன் பக்கம் அழைக்கப்படுகிறார்கள். அடுத்து வரக்கூடிய

எப்படி உங்களால் நிராகரிக்க முடிகிறது?

இந்த இடத்தில் யூதர்கள் முன்வைத்த ஒரு ஆட்சேபனைக்கு பதிலளிக்கப்படுகிறது. கொசு, ஈ, சிலந்திப்பூச்சி போன்ற அற்பமான உயிரினங்களைக் கொண்டா அல்லாஹ் உதாரணங்கள் கூறுகிறான் என்று அவர்கள் ஆட்சேபனை எழுப்பினார்கள். அவர்களின் நோக்கம், திருக்குர்ஆனுடைய நம்பகத்தன்மையில் கேள்வி எழுப்புவதுதான்.      إِنَّ اللهَ لَا يَسْتَحْيِي أَنْ يَضْرِبَ مَثَلًا

இவ்வுலக இன்பங்களின் இயல்பு என்ன?

அறிவுமுதிர்ச்சி கொண்டவர்கள் தங்களின் பலத்தையும் பலவீனத்தையும் அறிகிறார்கள். தங்களின் பலவீனம் தங்களை தடுமாறச் செய்துவிடக்கூடாது என்ற விழிப்புணர்வின் வெளிப்பாடே அவர்களிடமிருந்து வெளிப்பட்ட மேற்கண்ட பிரார்த்தனை. மனம் இச்சைகளுக்கு அடிமையாகி விடும்போது பலவீனமடைந்து விடுகிறது. நிராகரிப்பு பலவீனமடைந்த மனதின் வெளிப்பாடேயாகும். அற்ப ஆதாயங்களுக்காக அவர்கள் சத்தியத்தை கைவிட துணிகிறார்கள். அவர்கள்

ஆலுஇம்ரான் (இம்ரானின் குடும்பத்தினர்)

அல்பகரா அத்தியாயத்தை தொடர்ந்து இடம்பெறும் இந்த அத்தியாயம் அதன் இன்னொரு பகுதி போன்று அதனை முழுமைப்படுத்தக்கூடியதாகவும் அதில் சுருக்கமாக இடம்பெற்றுள்ள சில விசயங்களை இன்னும் கூடுதலாக தெளிவுபடுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது. இந்த இரு அத்தியாயங்களும் ஒரு மரத்திலிருந்து வெளிப்பட்ட இரு கிளைகள்போன்று இருக்கின்றன. இரண்டும் முஹம்மது நபியவர்களின் தூதுத்துவத்தை சந்தேகத்திற்கு

குர்ஆனை எவ்வாறு அணுக வேண்டும்?

செய்யத் குதுப் திருக்குர்ஆன் இஸ்லாமிய அழைப்பின் வேதமாகவும் அதன் ஆன்மாகவும் அதனை செயல்படத் தூண்டும் காரணியாகவும் அதன் அடித்தளமாகவும் இருக்கின்றது. அதுதான் இந்த அழைப்பைப் பாதுகாக்கக்கூடியது; பராமரிக்கக்கூடியது; தெளிவுபடுத்தக்கூடியது. அதுதான் இந்த அழைப்பின் சட்டமாகவும் வழிமுறையாகவும் இருக்கின்றது. அதிலிருந்தே – அழைப்பாளர்கள் பெற்றுக்கொள்வதுபோல – இஸ்லாமிய அழைப்பு தனக்கான

அல்பகரா நிறைவுப் பகுதி

திருக்குர்ஆனின் மிக நீண்ட அத்தியாயம் தன் இறுதிப் பகுதியை அடைந்திருக்கிறது. அடுத்து வரக்கூடிய இறுதியான வசனங்கள் அதன் முடிவுரைபோலவே இருக்கின்றன. அவை முந்தைய வசனங்களோடும் ஒட்டுமொத்த அத்தியாயத்தோடும் ஒருசேர தொடர்பு கொண்டிருக்கின்றன.    لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأرْضِ وَإِنْ تُبْدُوا مَا فِي

வட்டித் தொழிலும் தன்னல வெறியும்

தர்மம் செய்வதன் ஒழுங்குகள், நல்ல தர்மம் ஏற்படுத்தும் தாக்கங்கள், மோசமான தர்மம் ஏற்படுத்தும் விளைவுகள் ஆகியவை தெளிவுபடுத்தப்பட்ட பிறகு அதற்கு முற்றிலும் மாறான வட்டியைக் குறித்து பேசப்படுகிறது. முஸ்லிகள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் சமூகத்தினர். அவர்கள் மற்றவர்களின் துன்பங்களைக் கொண்டு பயனடையக்கூடியவர்கள் அல்ல. அந்த துன்பங்களிலிருந்து அவர்களை விடுவிக்க தங்களால்

ஷைத்தானின் அச்சுறுத்தலும் அல்லாஹ்வின் வாக்குறுதியும்

கடந்த வசனங்களில் தர்மம் செய்வதன் ஒழுங்குமுறைகளும் அவை பின்பற்றப்படவில்லையெனில் ஏற்படும் விளைவுகளும் தெளிவுபடுத்தப்பட்ட பிறகு அடுத்த வரும் வசனங்களில் தர்மம் செய்யப்படும் பொருள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் இன்னும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில ஒழுங்குகள் குறித்தும் தெளிவுடுத்தப்படுகின்றன. يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنْفِقُوا مِنْ

உதவி செய்வதன் ஒழுங்குகள்

மீண்டும் அத்தியாயம் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதன் பக்கம் திரும்புகிறது. இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பலப்படுத்தும்பொருட்டு செய்யப்படும் செலவுகள் அனைத்தும் அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் செலவுகள்தாம். அவ்வாறு செலவு செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் அடுத்தடுத்த வசனங்களில் தெளிவுபடுத்தப்படுகின்றன. அவை நுட்பமான, ஆழமான உளவியல் கூறுகளைக் கொண்டிருக்கின்றன.     مَثَلُ

மூன்று உதாரணங்கள்

யார் நேர்வழியை விரும்புகிறார்களோ அவர்கள் நிச்சயம் நேர்வழியை அடைவார்கள். நேர்வழியை விரும்பக்கூடியவர்களை அல்லாஹ் ஒருபோதும் கைவிட்டு விடுவதில்லை. நேர்வழியை விரும்பக்கூடியவர்களுக்குத்தான் அந்தப் பாதை தெளிவாகிக் கொண்டே செல்லும். அவர்கள் எல்லாவிதமான இருள்களிலிருந்தும் பாதுகாக்கப்படுவார்கள். நேர்வழியை விரும்பாதவர்கள் அதனைவிட்டு தூரமாகிக் கொண்டே செல்வார்கள். ஷைத்தான்கள் அவர்களின் தோழர்களாக மாறிவிடுவார்கள். அந்த

ஆயத்துல் குர்ஸீ

மனிதர்கள் ஏன் அலட்சியமாக இருக்கிறார்கள்? அல்லாஹ்வைப் பற்றிய பிழையான கண்ணோட்டத்திலிருந்தே அவர்களின் அலட்சியம் உருவாகிறது. அவர்கள் அல்லாஹ்வை மனிதர்களைப் போன்ற பண்புகளைக் கொண்ட போலியான கடவுள்களைப் போன்றவன்தான் என்று எண்ணிக் கொள்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வைக் குறித்து சரியான முறையில் அறிந்து கொண்டால் அவனுடைய கட்டளைகளை தங்களின் வாழ்க்கையில் செயல்படுத்த

செலவு செய்யுங்கள்

தூதர்கள் அவனுடைய தூதை சுமந்து வந்தவர்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான தனித்தன்மையைக் கொண்டவர்கள். அந்த தனித்தன்மைகள் அவர்கள் நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்கேற்ப, அவர்களின் காலகட்டத்திற்கேற்ப அவர்களுக்கு வழங்கப்பட்டவையாகும். அவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு மத்தியில் பாகுபாடு காட்டப்படக்கூடாது. அவர்கள் கொண்டு வந்த மார்க்கம் ஒன்றுதான். அவர்களுக்கு மத்தியில் பாகுபாடு