“அந்த கணத்தை என்னால் அவ்வளவு எளிதாக கடக்க முடியவில்லை. வெறுமையும் அழுத்தமும் சலிப்பும் கடந்த உணர்வு அது. அந்த கணத்தில் செத்து விடலாமா என்று கூடத் தோன்றுகிறது. நான் என்ன செய்வது?“ ஏதோ ஒரு வகையில் மன அழுத்தமோ மனச் சிக்கலோ கொண்டவர்களுக்கு அவ்வப்போது ஏற்படக்கூடிய நிலைதான் இது.
“நான் மனிதர்களைப் பார்த்தவுடன் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று கணித்து விடுவேன்” உங்களின் இந்தக் கணிப்பை பொதுவான ஒன்றாக முன்வைக்க முடியாது. உங்களின் கணிப்பு உங்களுடன் ஒத்திசைந்து செல்பவர் யார், முரண்படுபவர் யார் என்பதை அறிந்துகொள்வதற்கு வேண்டுமானால் உங்களுக்குப் பயன்படலாம். பொதுவாக ஒருவரைப் பார்த்தவுடனேயே நமக்கு ஏற்படும் உணர்வு நமக்கும்
நாம் விரும்பும் விசயத்தை சம்பந்தப்பட்டவரிடம் நேரடியாக வெளிப்படுத்துவது ஒரு வகை. இது இலகுவானது, சிக்கல் அற்றது, புரிந்து கொள்ளத்தக்கது. இன்னொரு வகை, நாம் விரும்பும் விசயத்தை மற்றவர்கள் புரிந்து கொண்டு அதை அவர்கள் நமக்காகச் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது. மனிதர்கள் சுயநலம் கொண்டவர்கள் என்பதால் பெரும்பாலும் அவர்கள்
எதிர்காலத்தில் என்ன நிகழும் என்று யாருக்கும் தெரியாது. நாம் நம் அனுபவங்களை, முந்தைய சம்பவங்களை முன்வைத்து கணிக்கிறோம். நம்முடைய கணிப்பு சரியாகவும் அமையலாம். அதற்கு மாறாகவும் அமையலாம். எந்தவொரு விசயத்தையும் குறித்து குறிப்பிட்ட அளவுவரை மட்டுமே நாம் யோசிக்க வேண்டும். அதற்கு மேல் யோசித்தால் நாம் எந்தவொரு செயலிலும்
நாம் எப்போது சிந்திக்கிறோம்? ஓய்வாக இருக்கும்போதுதான் சிந்திக்கிறோம். தொடர்ந்து ஏதேனும் ஒரு வேலையிலும் மீதமுள்ள சமயங்களில் பொழுதுபோக்கிலும் நாம் ஈடுபட்டுக் கொண்டேயிருந்தால் சிந்திப்பதையே மறந்து விடுவோம். இயல்பான, ஆரோக்கியமான சிந்தனைகளை நாம் இழந்து விடுகின்றோம். தனிமை நம்மை அச்சுறுத்தக்கூடியதாக மாறி விடுகிறது. எப்போதும் எதையேனும் ஒன்றை செய்து கொண்டிருக்கும்
நீண்ட நாளுக்குப் பிறகு அவரது கடைக்குச் சென்றேன். மனிதர் பார்ப்பதற்கு மிகவும் சோர்வாகவும் களைப்பாகவும் தெரிந்தார். அவருக்கும் எனக்கும் மத்தியில் நடைபெற்ற உரையாடல்: “என்னாச்சு, ரொம்ப சோர்வா இருக்கீங்களே?” “அம்மா இறந்து விட்டார்கள், அதான்.” “இறந்து எவ்வளவு நாளாயிற்று?” “ஒரு மாதம் ஆகிவிட்டது.” “பிறகு ஏன் இவ்வளவு கவலையாக